திருப்பூர், பிப். 25 - பிரதமர் மோடியை விமர்சித்த ரயில் பயணிக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக மாநிலத்துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி யைக் கைது செய்ய வலியுறுத்தி திருப்பூரில் மார்க்சிய, அம்பேத்க ரிய, பெரியாரிய இயக்கங்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சில நாட்களுக்கு முன்பு, சென் னையிலிருந்து வந்த சதாப்தி ரயிலில் முதிய பயணி ஒருவர், பத்திரிகையில் வந்த செய்தியின்படி, ஒன்றிய பாஜக மோடி அரசு குறித்து விமர் சித்துள்ளார். அவரது அருகில் அமர்ந் திருந்த பாஜகவைச் சேர்ந்த நாராய ணன் திருப்பதி, இதைக் கேட்டு அந்த முதிய பயணியைப் பார்த்து, ‘பிரத மரை அவதூறாகப் பேசுகிறாயா? ரெண்டு நிமிடத்தில் உன்னைத் தூக்கி விடுவேன்” என்று கொலை மிரட் டல் விடுத்திருக்கிறார். அதே ரயிலில் பயணித்த தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ், முதியவருக்கு ஆத ரவாகப் பேசியிருக்கிறார். அதற்கு பாஜக நாராயணன், ரயில்வே போலீ சார் மற்றும் வெளியில் இருந்து பாஜக வினரை வரவழைத்து, அவருக்கும் மிரட்டல் விடுத்திருக்கிறார். இதில் பாரபட்சமின்றி செயல்பட வேண்டிய ரயில்வே போலீசார், பாஜ கவை சேர்ந்தவர், ரயில்வே ஆலோச னைக் குழு உறுப்பினராகவும் இருப் பதால் நாராயணனுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். பொது மக் கள் மோடியை விமர்சித்தால் கொலைமிரட்டல் விடுப்பதும்,
அதிகாரத்தைப் பயன்படுத்தி மிரட் டல் விடுப்பதும் பாஜகவின் பாசிச சிந் தனையை வெளிப்படுத்துவதாக உள்ளது. எனவே, இதைக் கண்டித்து ஜனநாயக சக்திகள் கண்டன இயக் கம் நடத்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறிக்கை விடுத் தது. அதன்படி, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் சனியன்று காலை தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், நாராயணன் திருப் பதி மீது வழக்குப் பதிவு செய்து நட வடிக்கை எடுக்கவும், ரயில்வே போலீ சாரின் நடவடிக்கைகளை கண்டித் தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட் டத் தலைவர் ச.நந்தகோபால் தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் கு.பாலமு ரளி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ். பவித்ராதேவி, சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் பி.பாலன், தமுஎ கச மாவட்டச் செயலாளர் ஆர். குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்டச் செயலாளர் சி.கே. கனகராஜ், ஆதித்தமிழர் ஜனநாய கப் பேரவை நிறுவனத் தலைவர் அ.சு. பவுத்தன், தந்தை பெரியார் திராவிடர் கழக மாநகரத் தலைவர் சண்.முத்துக் குமார், திராவிடர் விடுதலைக் கழக மாநகரத் தலைவர் முகில் ராசு, தலித் விடுதலைக் கட்சி துணைப் பொதுச் செயலாளர் விடுதலை செல்வம், தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கத் தலைவர் வி.பி.எம். பன்னீர்செல்வம், தேசிய புலிகள் கட் சியின் குணசேகரன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட் டத்தில் திரளானோர் கலந்து கொண் டனர்.