districts

150 ஆண்டுகளாகக் குடியிருந்து வரும் மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா கேட்டு போராட்டம்

ஈரோடு, நவ.26- 150 ஆண்டுகளாக வீடு கட்டி குடியி ருக்கும் அருந்ததிய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறிவித்துள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட் டத்தித்திற்குட்பட்ட தோப்பூர் பகுதியில், சர்வே எண்.340/2ல் அமைந்த 1.028.5 ஏர்ஸ் நிலத்தில்  198 அருந்ததிய குடும்பத்தினர் வீடு கட்டி, கடந்த 150 ஆண்டுகளாக வசித்து வருகின்ற னர். வீட்டு மனைப்பட்டா கொடுப்பதற்காக 1939 ஆம் ஆண்டு நில எடுப்பு செய்யப்பட் டது. ஆனால், பட்டா கொடுக்கவில்லை. கிராம கணக்கில் தவறாக ரயத்து புஞ்சை என பதி வானது. மேலும், அந்நிலத்தை நகராட்சி நிலம் என்றனர். இதுகுறித்து தகவல் அறியும் உரிமை  சட்டப்படி ஆவணங்களைக் கேட்ட போது நகராட்சி நிவாகம் அதனை தங்கள் நிலம் இல்லை என்றது. ஆனால், இதுவரை அம் மக்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. இதேபோல, அந்தியூரில் உள்ள மந்தை மாரி யம்மன் கோவில். இங்குள்ள நத்தம் புறம் போக்கில் 32 பேர் வசிக்கின்றனர். அதில் 9 பேருக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட் டுள்ளது. எஞ்சிய 23 குடும்பத்தினருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்படாமல் நிலுவை யில் உள்ளது. அதேபோல் சத்தியமங்கலம் வட்டம்,  மலையடிப்புதூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் நில எடுப்பு செய்யப்பட் டது. அதில் 63 பேருக்கு பட்டா வழங்கப்பட் டது. அருந்ததிய மக்கள் இதில் வீடு கட்டி  வசித்து வருகின்றனர். ஆனால், அந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என வக்ஃப் வாரி யம் உரிமை கொண்டாடுகிறது. இதனால் பத் திரப்பதிவு அலுவலகங்களில் எந்தவிதமான அடமானமும் செய்யத் தடை விதிக்கப்பட்டுள் ளது. எனவே, அந்த நிலத்தில் எவ்விதமான  பரிவர்த்தனையும் செய்ய முடியாமல் அம்மக் கள் தவிக்கின்றனர். இம்மூன்று கோரிக்கை களை முன்வைத்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், கடந்த செப்.30 ஆம் தேதியன்று கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் அறிவிக்கப்பட் டது.  இதனிடையே மாவட்ட நிர்வாகம் செப்.29 ஆம் தேதியன்று கலைஞர் நூற்றாண்டு விழா வையொட்டி, வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க சிறப்பு முகாம்  நடத்தியது. ஆனால், தீண்டாமை ஒழிப்பு முன் னணி அறிவித்த போராட்டம் திட்டமிட்டபடி நடைபெற்றது. போராட்டத்திற்கிடையில் அந் தியூர் பகுதி மக்களுக்கு 15 தினங்களுக்குள் வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும். ஏனைய வற்றிற்கும் தடையை நீக்கி, அரசின் ஒப்புதல் பெற்று கொடுக்கப்படும் என கோட்டாட்சியர் பொறுப்பு அலுவலர் உறுதியளித்தார். இத னால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக் கப்பட்டது. ஆனால், சுமார் 2 மாத காலமாகி யும் வீட்டுமனைப்பட்டா பிரச்சனை தீர்க்கப் படவில்லை. இதனால் டிசம்பரில் மீண்டும் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செய லாளர் மு.அண்ணாதுரை மாவட்ட ஆட்சிய ருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட் டுள்ளது.