சேலம், செப்.19- சேலத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக் கும் பணியை விரைந்து முடித்து பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியு றுத்தி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், மல்லமூப்பம்பட்டி ஊராட்சி, மூலக்கடை பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கழிவுநீர் கால்வாய் ஏதும் இல்லா ததால், பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற் குள்ளாகி வந்தனர். இதையடுத்து ஒன்றிய நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் நல்லுகாரர் வீதி முதல் மூலக் கடை வரை கான்கிரீட் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளது. ஆனால், இப்பணிகள் முழுமை பெறுவதற்கு முன்னதாகவே பணிகள் நிறைவு பெற்றதாக கூறி கல்வெட்டு ஒன்றை வைத்துவிட்டு சென் றதாக கூறப்படுகிறது. கழிவுநீர் முறையாக செல்ல வழி இல்லாததால், கழிவுநீர் முழுவ தும் சாலையில் தேங்குவதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை காய்ச்சல், மலே ரியா, டெங்கு, தோல் நோய் உள்ளிட்ட பல் வேறு நோய்கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக உரிய நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதுரோட்டில் இருந்து முத்துநாயக்கன்பட்டி செல்லும் பிரதான சாலையை இருசக்கர வாகனங்கள் மூலம் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இப்பகுதி யில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் விரைந்து முடிக்க அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை யடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.