சேலம், மார்ச் 4- சேலம் சௌடேஸ்வரி கல்லூரி முதல்வர் பாலாஜி மீது பாலியல் புகார் தெரிவித்து மாணவிகள் மற் றும் ஆசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் மாநகரம், கொண்டலாம் பட்டியில் சௌடேஸ்வரி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூ ரியின் முதல்வராக பாலாஜி என்ப வர் உள்ளார். இவர் பல நாட்களாக கல்லூரி மாணவிகள் மற்றும் ஆசிரி யர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடு பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அளிக்கப் பட்ட புகாரின் பேரில், கல்லூரி முதல்வரின் ஒழுங்கீன செயல்கள் குறித்து பிப்ரவரி 27ஆம் தேதி கல் லூரி கல்வி இணை இயக்குனர் தலைமையில் ஆய்வு மேற்கொள் ளப்பட்டது. இதில், இவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப் பட்டது. இதனையடுத்து, பாலா ஜியை சஸ்பெண்ட் செய்து உத்தர விட்டனர். இதையடுத்து, தனக்கு உடல் நிலை மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக, கல்லூரி நிர்வாகத்திற்கு தெரிவித்தார். மேற் படி கடிதத்தின் பேரில், பாலாஜி முதல்வர் பதவியில் இருந்து விடு விக்கப்பட்டார். இந்நிலையில், தருமபுரி மண் டல கல்லூரி உயர்கல்வி இணைய இயக்குனர் ராமலட்சுமி விசாரணை யின் அடிப்படையில், பாலாஜி மீண் டும் முதல்வர் பணியில் சேர அனு மதி அளித்து ஆணை பிறப்பித்தது. இதையடுத்து, பாலாஜி மீண்டும் கல்லூரி முதல்வராக பொறுப் பேற்றார். இந்நிலையில் பாலாஜி மீண் டும் கல்லூரி முதல்வராக பொறுப் பேற்றதை கண்டித்தும், அவரை உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி ஆசிரி யர்கள் மற்றும் மாணவிகள் ஆயிரத் திற்கும் மேற்பட்டோர், கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இத னால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
சிபிஎம் கண்டனம்
சிபிஎம் கண்டனம் இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மாவட்டச் செய லாளர் மேவை. சண்முகராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் செயல்படும் சௌடேஸ்வரி மகளிர் கல்லூரி முதல்வர் பாலாஜி என்பவர் மாணவிகள் மற்றும் ஆசிரியர்க ளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருப்பது வன்மையான கண்டனத் திற்குரியது. தமிழக அரசும், உயர்கல்வி துறையும் அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சௌடேஸ்வரி கல்லூரிக்கு தகுதி வாய்ந்த முதல்வரை தேர்வு செய்து, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, தெரி விக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, இந்திய மாணவர் சங்கம் சேலம் மாவட்டக் குழுவும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.