districts

img

ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் ஜூலை 12- ஓய்வூதியத்தை 10 சதவிகிதம் உயர்த்த வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலை முன்பு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை கலைந்திட வேண்டும்.  70 வயதான ஓய்வூதியர்களுக்கு 10 சதவிகிதம்  ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்க வேண் டும். குடும்ப நல நிதியை உடனுக்குடன் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலை முன்பு ஓய்வு பெற்ற  பள்ளி, கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.கருப்பண்ணன் தலைமை தாங்கினார். இதில், மாநில இணை செயலாளர் நல்லாகவுண்டர், மாநிலக்குழு உறுப்பி னர் எம்.எஸ்.குணசேகரன், மாவட்ட செயலாளர் கே.இளங் கோவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.