திருப்பூர், நவ.6- நியூஸ் கிளிக் பத்திரிக்கை மீதான ஒன்றிய பாஜக அரசின் அடக்குமுறையை கண்டித்தும், பத்திரிக்கையாளர்களை கைது செய்து உபா சட்டத்தில் சிறையில் அடைத்ததைக் கண் டித்தும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் திங்கட் கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நியூஸ் கிளிக் பத்திரிக்கை மீது போடப்பட்ட எப்.ஐ.ஆர் நகல் எரிப்பு போராட் டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ். ஆர்.மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட் டத்தில், ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங் கிணைப்பாளரும், த.வி.ச.மாவட்ட செயலாளருமான ஆர்.குமார், மாவட்ட துணை தலைவர் எஸ்.கே.கொளந்தசாமி ஆகி யோர் கண்டன உரையாற்றினர். போராட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள் வெங்கட்ராமன், அப்புசாமி, லெனின், நட ராஜ், ராதாமணி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் ஆர்.மணியன் உட்பட திரளான விவ சாயிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டு எப்.ஐ.ஆர். நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.