தாராபுரம், ஜூன் 8- தாராபுரத்தை அடுத்துள்ள கோப்பண கவுண்டம்பாளையம் பொதுமக்கள் வழிபாட்டு உரிமை கோரி தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரத்தை அடுத்த குண்ட டம் ஊராட்சி ஒன்றியம் சூரியநல் லூர் ஊராட்சி கோப்பண கவுண்டன் பாளையத்தில் சுமார் 75க்கும் மேற் பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பத்தை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி யில் உள்ள அரசு புறம்போக்கு நிலத் தில் பொதுமக்கள் சார்பில் பட்டத்த ரசி அம்மன் மற்றும் கண்ணியாத் தாள் கருப்பராயன்சாமி கோவில் அமைத்து கடந்த 50 ஆண்டு கால மாக பாரம்பரியமாக வழிபட்டு வரு வதுடன் ஒவ்வொரு ஆண்டும் கோயிலில் திருவிழா நடைபெறு வது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் கோயிலைச் சுற்றி வரும் பாதையை அதன் அருகி லுள்ள நில உரிமையாளர்கள் ஆக்கி ரமிப்பு செய்துவிட்டதால் கோயிலுக் குள் செல்ல முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. இதனால் 50 ஆண்டுக ளுக்கு மேலாக ஊர் பொதுமக்கள் வழிபட்டு வந்த கோவில் திருவிழா 5ஆண்டு காலமாக நடைபெற வில்லை. இந்த கோயிலுக்கு அரசு பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சி யர் மற்றும் அதிகாரிகளுக்கு ஊர் பொதுமக்கள் சார்பாக மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவ டிக்கை இல்லை. இதைக் கண்டித்து ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை நிறுவன தலைவர் அ.சு.பவுத்தன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் வழி பாட்டு உரிமையை கோரி தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை யடுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் கோட் டாட்சியர் குமரேசன் மற்றும் காவல் ஆய்வாளர் மணிகண்டன் ஆகி யோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட னர். முடிவில் கோட்டாட்சியர் குமரே சன் உடனடியாக வருவாய்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கோயில் நிலத்தை அளந்து வழிபாடு நடத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்ற னர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.