districts

img

சிறு, குறு தொழில்களை பாதுகாத்திடுக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்

திருப்பூர், ஜன.25- நூல் விலை ஏற்றத்தை கட்டுப் படுத்தக் கோரியும், அழிந்துவரும் சிறு, குறு தொழில்களை பாதுகாக்க கோரியும் இண்டஸ்ட்ரியல் பனியன் மேனிபேக்சர் மற்றும் அசோசியேசன் சார்பில் திருப்பூர் மாநகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னலாடை உற்பத்திக்கு முக் கிய மூலப்பொருளான நூல் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக பின்னலாடை நிறுவனங் கள் மிகவும் மோசமான சூழலை சந் தித்து வருகிறது. நூல் விலையை கட் டுப்படுத்தக்கோரி ஒன்றிய அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகு தியாக, திருப்பூர் இண்டஸ்ட்ரியல் பனி யன் மேனிபேக்சர் மற்றும் அசோசியே ஷன் சார்பில் திருப்பூர் மாநகராட்சி முன்பு செவ்வாயன்று கண்டன ஆர்ப் ்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்ற 50க்கும் மேற் பட்டோர் நூல் விலையை கட்டுப்ப டுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க  கோரியும், அழிந்து வரும் சிறு, குறு தொழில்களை பாதுகாக்க கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.