திருப்பூர், டிச. 28 - இடுவாய் கிராமத்தில் அமைந்திருக்கும் மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்று வதாக காலக்கெடு தெரிவித்திருந்த டாஸ் மாக் நிர்வாகம் காலக்கெடு முடிந்த பிறகும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. இதைக் கண்டித்தும், உடனடியாக மதுபானக் கடையை அங்கிருந்து அகற்ற வலியுறுத்தி யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இடுவாய் கிராமத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள குடியிருப்புப் பகுதியில் டாஸ் மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகி றது. இந்த கடையில் மது குடித்து விட்டு வரும் போதை நபர்களால் இப்பகுதி பெண்கள், மாணவ, மாணவிகள் அச்சத்துடன் அப்பகு தியைக் கடந்து செல்லும் நிலை உள்ளது. பல் வேறு வகையிலும் இடுவாய் கிராமத்தில் பாதிப்பு ஏற்படுத்தி வரும் இந்த மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என வலியு றுத்தி இடுவாய் ஊராட்சி மக்கள் சார்பில் ஊராட்சிமன்றத் தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கே.கணேசன் திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து கோரிக்கை மனு கொடுத்ததுடன், கிராம சபை யிலும் தொடர்ந்து தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.
எனினும் இக்கடை அகற்றப்படாத நிலையில் முற்றுகைப் போராட்டம் அறிவிக் கப்பட்டது. கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் பங்கேற்று முற்றுகையிட முயன்றபோது டாஸ்மாக் மேலாளர், காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி காலக்கெடு கொடுத்து, இக்கடையை அகற்றுவதாக உறு தியளித்தனர். டிசம்பர் 26ஆம் தேதியுடன் அந்த காலக்கெடு முடிவடைந்து விட்டது. எனி னும் கடை அகற்றப்படவில்லை. இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் இடு வாய் ஊராட்சி கிளைகள் சார்பில் புதன்கி ழமை இடுவாய் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் இடுவாய் வடக்கு கட்சிக் கிளைச் செயலா ளர் கே.கருப்புசாமி தலைமை வகித்தார். தெற்கு கிளைச் செயலாளர் சுந்தரம், சீரா ணம்பாளையம் கிளைச் செயலாளர் அ.ப. ரத்தினசாமி, பாரதிபுரம் கிளைச் செயலா ளர் கார்த்திக் ஆகியோர் உள்பட பெருந்தி ரளான பெண்கள் பங்கேற்றனர். கட்சியின் ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.