ஈரோடு, ஆக.26- அந்தியூர் பேரூ ராட்சியில் கூத்தம்பூண்டி பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்ட பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் ஆய்வு செய்தார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சியில் கூத்தம்பூண்டி பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்டம் கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்சமயம் 40 ஆண்டுகளைக் கடந்த நிலையில் அடிக்கடி குழாய்களில் பழுது உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்த மக்களின் புகாரையடுத்து, டுபிட்கோ நிறுவனத்தின் மூலம் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் இடங்களான கருவல்வாடி புதூர், தம்மங்கரடு ஆகிய இடங்களிலும் மற்றும் மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட உள்ள இடங்களான தவிட்டுப்பாளையம் ஏகே பழனியப்பா வீதி, அந்தியூர் வார சந்தை ஆகிய இடங்களையும், மேல்நிலைத் தொட்டி அமைந்துள்ள தவிட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய வளாகம் ஆகிய இடங்களில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமையில் ஆய்வு மேற்கொண்டார்.