districts

விசைத்தறி தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாத்திடுக

விசைத்தறி உரிமையாளர்கள் ஆட்சியரிடம் முறையீடு

ஈரோடு, நவ.19- விசைத்தறி தொழில் மற்றும் தொழி லாளர்களை பாதுகக்க வேண்டும் என வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள வீரப்பன் சத்திரம், மாணிக்கம்பாளையம், சித்தோடு, லக்காபுரம் போன்ற பகுதிகளில் ஆயிரத் திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங் களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகிறது. விசைத்தறி தொழில் மூலம் நேரடியாக 15 ஆயிரம் தொழிலாளர்களும், மறைமுகமாக 30 ஆயிரம் தொழிலாளர்களும் தங்களது வாழ்வாதாரத்தை நகர்த்தி வருகின்றனர். மேலும், 50 ஆயிரம் விசைத்தறிகள் 25 சதவிகிதம் விசைத்தறி கூடங்களில் தமிழக அரசின் விலையில்லா வேட்டி, சேலை மட்டுமே உற்பத்தி செய்து வருகிறார்கள். பெரும்பாலும் 75 சதவிகிதம் விசைத்தறி கூடங்களில் ரயான் எனப்படும் செயற்கை இழை (எம்எம்இ) நூலைக் கொண்டு துணியாக சொந்த உற்பத்தி செய்து வருகிறார்கள். கடந்த மூன்று மாதங்களாக எங்களது துணியின் விலை நூலின் அடக்கத்திற்கு குறைவாகவே விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த ஆறு மாதங்க ளாக கொள்முதல் செய்யும் நூலின் விலையை விட விற்பனை செய்யும் நூலின் விலை மேலும் வீழ்ச்சி அடைந்து ஒரு மீட்டருக்கு குறைந்தபட்சம் 3 ரூபாய் முதல் 4 ரூபாய் வரை நஷ்டத்தில் வியா பாரம் செய்து வருகிறோம். எனவே, ஈரோடு மாவட்டத்தில் உள்ள விசைத்தறி தொழி லையும், தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தையும் பாதுகாக்கும் வகையில் மத் திய, மாநில அரசுகளின் ஜவுளித் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தி திங்களன்று விசைத் தறி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.