திருப்பூர், மார்ச் 13- சாமளாபுரத்தில் அருந்ததியர் மக் கள் குடியிருப்பை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த இடத்தை வகை மாற்றம் செய்து அங்கு வாழும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத் தில் கடந்த 12 நாட்களாக தொடர் காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை ஞாயிறன்று விடுதலை சிறுத் தைகள் கட்சியின் தலைவர் தொல்.திரு மாவளவன் நேரில் சந்தித்தார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பூர் சாமளாபுரம் பகுதியில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்களை அப்புறப்படுத்தும் நோக்கில் நீர்வளத் துறை நோட்டிஸ் அனுப்பி உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. நூற்றாண்டுக் கும் மேலாக வசித்து வரும் இந்த மக் களுக்கு குடியிருக்கும் இடத்தை நத் தம் நிலமாக வகை மாற்றம் செய்து உரிய பட்டா வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருமாவள வன் கூறினார். இந்த நிகழ்ச்சியில் விடு தலை சிறுத்தைகள் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.