districts

img

கோவையில் 7 கொப்பரை தேங்காய் கொள்முதல் மையங்கள் 1500 விவசாயிகளிடமிருந்து ரூ22.01 கோடி மதிப்பில் கொள்முதல்

கோவை, ஜூன் 30–  கோவை மாவட்டத்தில் விவசா யிகளிடமிருந்து ரூ.22.01கோடி மதிப்பில் 2ஆயிரத்து 78.9 மெட்ரிக்  டன்  கொப்பரை தேங்காய் கொள் முதல் செய்யப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் ஜி. எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். கோவை கிணத்துக்கடவு சிங் கம்பாளையம் பிரிவு, ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள கொப் பரை தேங்காய் கொள்முதல் நிலை யத்தை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ்.சமீரன் நேரில் பார் வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.  இதில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண் மை) தமிழ்செல்வி, வேளாண்மை அலுவலர்  சூர்யா, உதவி வேளாண்மை அலுவலர் தமிழர சன், விற்பனை கூட கண்காணிப் பாளர் விஜயகுமார் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஆய்வுக்கு பின் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கூறு கையில், தமிழக அரசு விவசா யிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், தென்னை சாகுபடி செய்யும் விவசா யிகள் பயன்பெறும் வகையில், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங் கள் வாயிலாக கொள்முதல் செய் யப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, நெக மம், செஞ்சேரி, ஆனைமலை, கிணத்துக்கடவு, தொண்டாமுத் தூர் மற்றும் அன்னூர் ஆகிய 7  கொள்முதல் நிறுவனங்கள் செயல் பட்டு வருகின்றன.

 தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனுக்காக நிர்ண யிக்கப்பட்ட தரம், அளவு கொண்ட  அரவைத் தேங்காய் கொப்பரை கிலோ ரூ.105.90க்கும் பந்து தேங் காய் கொப்பரை கிலோ ரூ. 110.00க்கும் கொள்முதல் செய்யப்ப டும். இந்த கொள்முதல் 2022 பிப்பர வரியில் துவங்கி 2022 ஜூலை  வரை கால அளவு நிர்ணயிக்கப்பட் டுள்ளது. இதன்படி கோவை மாவட்டத் தில் கொப்பரை கொள்முதல் நிலை யமான செஞ்சேரியில் 604 விவசாயி களிடமிருந்து ரூ.8.54கோடி மதிப் பில் 807.05 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய்களும்,  நெகமத்தில் 300  விவசாயிகளிடமிருந்து ரூ.4.62 கோடி மதிப்பில் 436.95 மெட்ரிக் டன் னும், பொள்ளாச்சியில் 313 விவசா யிகளிடமிருந்து ரூ.4.81 கோடி மதிப் பில்  454.75 மெட்ரிக் டன், ஆனைம லையில் 76 விவசாயிகளிடமிருந்து ரூ.1.37கோடி மதிப்பில் 130.25 மெட்ரிக் டன், கிணத்துக்கடவில் 106  விவசாயிகளிடமிருந்து ரூ.1.52 கோடி மதிப்பில் 144.15 மெட்ரிக் டன்  கொப்பரை தேங்காய்களும், தொண்டாமுத்தூர் 12 விவசாயிகளி டமிருந்து ரூ.14.29இலட்சம் மதிப் பில் 13.5 மெட்ரிக் டன், அன்னூர் 89  விவசாயிகளிடமிருந்து ரூ.97.69 லட்சம் மதிப்பில் 92.25 மெட்ரிக் டன்  என மொத்தம் இதுவரை 1500 விவ சாயிகளிடமிருந்து ரூ.22.01கோடி மதிப்பில் 2078.9 மெட்ரிக் டன் கொப் பரை தேங்காய்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கிக் கணக்கு ஆகிய விவரங்களுடன் தங்கள் அருகிலுள்ள மேற்கண்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளரை அணுகி பதிவு  செய்து கொள்ளலாம்.  இத்திட்டத் தின் மூலம் கொள்முதல் செய்யப்ப டும் தேங்காய் கொப்பரைக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கிக்  கணக்கில் நேரடியாக வரவு வைக் கப்படும். கோவை  மாவட்டத்தை சேர்ந்த தென்னை விவசாயிகள் கொப்பரை கொள்முதல் மையத் தில் தேங்காய் கொப்பரை விற் பனை செய்து பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.