districts

img

கனிமவள கடத்தல் லாரிகளில் மாமூல் வசூல் பிரச்சனை: ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட பாஜக நிர்வாகிகள்

உடுமலை, ஜூலை 18 – கனிமவளங்களை கடத்தும் லாரிகளில் மாமூல் வசூல் விவ காரத்தில், பங்கு போடும் பிரச்சனை யில் பாஜகவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம்  அரசியல் வட்டாரத்தில் பேசு பொரு ளாக மாறியுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடு மலைப்பேட்டை அருகே பொள் ளாச்சி வட்டத்திற்கு உட்பட்ட கோமங்கலம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண் பிரசாத். இவர்  பாஜகவின் ஓ.பி.சி. ஐடி பிரிவு செய லாளர் என அனைவரிடம் தெரி வித்துக் கொள்வார். எம் சேன்ட், ஜல்லி, ஜல்லி சிப்ஸ் கற்கள் போன் றவை லாரிகளில் கேரள மாநிலத் துக்கு செல்லும்பொழுது அதனை  தடுத்து நிறுத்தி பிரச்சனை செய் வார். மேலும் அதிகாரிகளுக்கு புகார்கள் அளித்து நடவடிக்கை  எடுக்கக்கோரி பிரச்சனையில் ஈடு படுவார். ஆனால் கேரளாவுக்கு கனிம வளங்களை எடுத்து  செல்லும் லாரி உரிமையாளர் களிடம் உள்ளூர் பாஜக நிர்வாகிகள்  பலர் மாதந்தோறும் பணம் பெற்று  வந்துள்ளனர். அருணின் இந்த செய லால் அவர்களுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அருண் மீது கடும் கோபத்துடன் சில  பாஜக நிர்வாகிகள் செயல்பட்டு வந்துள்ளனர். அருண் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக உள்ள பாஜக  நிர்வாகி நாகமாணிக்கம் என்பவர்  இடையே நடைபெற்ற தொலை பேசி உரையாடல் ஆடியோ சமீ பத்தில் வைரலானது. அதில் நாக மாணிக்கம் எந்தெந்த பாஜக நிர்வாகிகளுக்கு மாமூல் பணம் செல்கிறது என அருணிடம் பேசி யுள்ளார். அருண் செய்த பிரச்ச னையை மையமாக வைத்து மற்ற  பாஜக நிர்வாகிகளும் பணம் சம் பாதிக்க துவங்கி விட்டனர். இத னால் அருணுக்கும், இவர்களுக் கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அருணும், நாகமாணிக்கமும் பேசிய ஒரு ஆடியோவில் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் இருவரும் மாறி மாறித் திட்டிக்  கொள்கின்றனர். இந்த பிரச்சனை  நாளுக்கு நாள் முற்றி திங்க ளன்று நாகமாணிக்கம் வீடு அமைந் துள்ள பகுதிக்கு அருண் சென்றுள் ளார். அப்பொழுது ஆறு பேர் கொண்ட கும்பல் அருணை சர மாரியாக தாக்கியுள்ளனர்.

இதனை  தொடர்ந்து உடனடியாக உடுமலை அரசு மருத்துவமனையில் அருண்  சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். அருண் உடுமலை காவல்  நிலையத்தில் புகார் அளித்தார். அதில் நாகமாணிக்கம் உட்பட  சிலர் தன்னை இரும்பு கம்பி களை கொண்டு தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாகத் தெரிவித் துள்ளார். இதைத்தொடர்ந்து  வழக்குப் பதிவு செய்த காவல்  துறையினர் நாகமாணிக்கத் திடமும் விசாரித்தனர். அவர் மடத்துக்குளம் வட்டத்தில் கட்சிக்  கூட்டத்தில் கலந்து கொண்டிருந் ததாகத் தெரிவித்துள்ளார். தான் அவரைத் தாக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் அருண்  தரப்பினர் நாகமாணிக்கம், அருணை தாக்கியது உண்மை தான். அப்பகுதியில் உள்ள கண் காணிப்பு கேமராவில் பார்த்து நாக மாணிக்கம் இந்த பிரச்சனையில் ஈடுபட்டாரா என்பதை தெரிந்து  கொள்ள வேண்டும் என கூறியுள் ளனர். மேலும் தாக்கியவர்கள் அருணின் செல்போனையும் பறித்து சென்றதாகவும் கூறப்படு கிறது. இந்நிலையில் திங்களன்று இரவு நாகமாணிக்கத்தின் ஆதர வாளர்கள் உடுமலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் அளித்தனர். இதில், அருண்  தரப்பினர் நாகமாணிக்கம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் மீது கற் களை வீசி  தாக்குதல் நடத்திய தாகத் தெரிவித்துள்ளனர். இந்த  புகார் அடிப்படையில் அருண் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். உடுமலை காவல்துறையினர் இரு தரப்பின் புகாரையும் பெற்றுக்  கொண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.