திருப்பூர், மார்ச் 14- இடுவாய் தியாகி கே.ரத்தின சாமியின் 20ஆம் ஆண்டு நினைவு தினப் பொதுக் கூட்டத்தில் இடு வாய் ஊராட்சி பள்ளிகளில் முதலி டம் பிடித்த மாணவ, மாணவிக ளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இடுவாய் தியாகி கே.ரத்தின சாமியின் 20ஆம் ஆண்டு நினைவு தினத்தில் இடுவாய் ஊராட்சி பள் ளிகளில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழுத் தலைவர் சி.வி.விநாயகம் ரொக் கப் பணத்துடன் புத்தகங்களை பரிசு வழங்கினார். அதன்படி இடு வாய் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் முத லிடம் பிடித்த டி.பிரசன்னாவுக்கு ரூ.1000 ரொக்கம், புத்தகம் ஆகிய பரிசுகளை தியாகி ரத்தினசாமி யின் மூத்த மகள் வி.ஆர்.கீதாஞ் சலி வழங்கினார். இடுவாய் ஊராட்சி பாரதிபுரம் ஊராட்சி ஒன் றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவி வி.சண்முகப்பிரியா வுக்கு ரூ.1500 ரொக்கம் மற்றும் புத்தகப் பரிசை தியாகி ரத்தினசாமி யின் இளைய மகள் ஆர்.நந்த லாலா வழங்கினார். இடுவாய் அரசினர் உயர்நி லைப் பள்ளியில் பத்தாம் வகுப் பில் முதலிடம் பிடித்த மாணவி பி. கிருத்திகாவுக்கு ரூ.2000 ரொக்கம் மற்றும் புத்தகப் பரிசை யுனிவர்சல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளா ளர் காலஞ்சென்ற ராஜகோபால் மகளும், தில்லி சட்டப்பல்கலை கழகத்தில் தங்கப் பதக்கம் வென்ற வருமான வினோதாரணி வழங்கி னார்.
மங்கலம் அரசினர் மேல் நிலைப் பள்ளி பன்னிரண்டாம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவி கே.கவியாஞ்சலிக்கு ரூ.2500 மற்றும் புத்தகப் பரிசை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், கந் தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப் பினருமான எம்.சின்னதுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய விநா யகம், தியாகி ரத்தினசாமி தலைவ ராக இருந்தபோது இந்த ஊராட்சி கல்வி வளர்ச்சியிலும், பள்ளி களை தரம் உயர்த்துவதிலும் மிகுந்த ஈடுபாடு காட்டியதையும், அவர் காலத்தில் இடுவாய் ஊராட் சியில் உயர்நிலைப் பள்ளி ஏற்படுத் தப்பட்டதையும், அதன் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 50 பேர் வீதம் கணக்கிட்டாலும் இருபது ஆண்டுகளில் ஏறத்தாழ 1000 பேர் இங்கிருந்து பத்தாம் வகுப்பு பயின் றுள்ளனர் என்றும், இடுவாய் ஊராட்சியில் பள்ளி கல்வியைத் தரம் உயர்த்த தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் தியாகி ரத்தின சாமி குடும்பத்தினருடன், யுனிவர் சல் பள்ளி செயலர் சாவித்திரி உள் ளிட்ட அவர்களது குடும்பத்தின ரும் கலந்து கொண்டனர்.