கோவை, ஜன.27- கோவையில் தனியார் பள்ளி மாணவ, மாணவி கள் போக்குவரத்து போலீசா ருடன் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வில் ஈடுபட்டனர். கோவை, கண்ணப்பநகர் பகுதியில் அமைந்துள்ள சங்கமம் நற்பணி குழு நடத்தும், சங்கமம் மெட்ரிக்குலேசன் பள்ளி சார்பில், கோவை ஜிபி. சிக்னலில் போக்குவரத்து விழிப்பு ணர்வு நடைபெற்றது. இரு சக்கர வாகன ஓட் டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண் டும். வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசக்கூடாது. நான்கு சக்கர வாகன ஓட்டி கள் சீட் பெல்ட் அணிய வேண்டும். இந்திய போக்குவரத்து சட்டத்தின்படி இடதுபுறத் தில் வாகனத்தை இயக்க வேண்டும். மது போதையில் வாகனங்களை இயக்கக் கூடாது. போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட வாச கங்களை அடங்கிய பதாகைகளை 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கையில் ஏந்தியவாறு, போக்குவரத்து காவல்துறை யினருடன் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில், சங்கமம் நற்பணி குழு நிர்வாகி கனகராஜ், பள்ளி தாளாளர், மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் கலந்துகொண் டனர்.