districts

சட்டவிரோதமாக மது விற்பனை: தனிப்படை அமைப்பு

தருமபுரி, அக்.25- தருமபுரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக சந்துக்கடைகளில் நடைபெற்று வரும் மது  விற்பனையை தடுக்க தனிப்படை அமைக் கப்பட்டுள்ளதென மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் அரூர், காரிமங்க லம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பாப் பாரப்பட்டி, நல்லம்பள்ளி, அதியமான் கோட்டை, தொப்பூர், இண்டூர் ஆகிய காவல் நிலைங்களுக்குட்பட்ட 200க்கும் மேற்பட்ட பகுதிகளில் சந்துக்கடை அமைத்து அதன் மூலம் தங்கு தடையின்றி 24 மணி நேரமும் மதுவிற்பனை படுஜோராக நடந்து வந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசு பாதம் உத்தரவின் பேரில் கடும் நடவடிக்கை  எடுக்கப்பட்டு, சட்ட விரோத மது விற்பனை யில் ஈடுப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், மாவட் டத்தில் சில இடங்களில் மீண்டும் சந்துக்கடை களில் மது விற்பனையும், கிராமங்களில் மறை வான இடத்தில் வைத்து விற்பனை செய்யப் பட்டு வருவதாக தெரிகிறது. இதற்கு சம்மந் தப்பட்ட காவல் நிலைய போலீசார் மற்றும்  மதுவிலக்கு போலீசார் துணைபோவதாக அப் பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கிராமங்களில் பெட்டி கடைகள், சாலையோர கடைகளிலும் பகிரங்கமாக மது விற்பனை நடந்து வருகிறது. சட்ட விரோத மது விற்ப னையில் ஈடுபடும் சிலர் போலியாக மதுவை தயாரித்து வருவதும் தெரிய வருகிறது. இந்த மதுவை வாங்கி அருந்தும் நபர்க ளுக்கு வயிற்று கோளாறு மற்றும் மூச்சுத்திண றல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இது சில  சமயங்களில் உயிரைப் பறிக்கும் அளவுக்கு  மோசமான நிலையை உருவாக்கும். எனவே, போலீசார் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த புகார் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்றது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப் பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது.  அந்த தனிப்படை போலீசார் தரு மபுரி நகரத்தில் சந்துகடைகளில் மது விற்ப னையில் ஈடுபடுவோர்களை பிடித்து கைது செய்து வருகின்றனர். அதேபோன்று மாவட் டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிரடி ரெய்டு களில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக மது விற்ப னையில் ஈடுபட்டு வரும் நபர்களை கைது செய்து வருவதாக மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் தெரிவித்துள் ளார்.