districts

img

போதையில் ஓட்டுநர்: தனியார் கல்லூரி பேருந்து விபத்து

நாமக்கல், ஜன.12- குமாரபாளையம் அருகே போதை யிலிருந்த ஓட்டுநர் இயக்கிய தனியார் கல்லூரி பேருந்து விபத்துள்ளனாது. மாணவ, மாணவிகள் இல்லாததால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட் டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு அருகே செயல்பட்டு வரும் தனி யார் கல்லூரியின் பேருந்தினை அதன் ஓட்டுநர் வெங்கடாஜலம் என்பவர்,  ஈரோடு மற்றும் பள்ளிபாளையம் பகுதி களில் உள்ள மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்வதற்காக வாக னத்தை இயக்கியுள்ளார். போதையில் வாகனத்தை இயக்கியதில் சாலைக ளில் உள்ள தடுப்புச்சுவரின் மீது மோதி வாகனம் விபத்துக்குள்ளானது. பள்ளிபாளையம் பகுதியில் மேம்பா லம் கட்டும் பணிக்காக சாலைகள் போக் குவரத்து மாற்றி அமைக்கப்பட்ட நிலை யில், போதையில் இதனை அறியாமல் ஒருவழி சாலையில் இயக்கியதுடன், பேருந்தினை பள்ளிபாளையம் பெட் ரோல் பங்கில் உள்ள பக்கவாட்டுச் சுவரின் மோதி சேதப்படுத்தியுள் ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள் உடனடி யாக பேருந்துக்குள் ஏறி வாகனத்தை நிறுத்தினர். இதனால் போதையிலி ருந்த ஓட்டுநர் வெங்கடாஜலம் தகரா றில் ஈடுபட்டார். இதையடுத்து வெங்க டாஜலம், பேருந்தை விட்டு இறங்கி சாலை நடுவே அமர்ந்து கொண்டார். அவருக்கு பாதுகாப்பு இல்லை என கரு திய பொதுமக்கள் அவரை பேருந்தின் இருக்கையில் படுக்க வைத்தனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்ப வத்தால் பள்ளிபாளையம் பகுதியில்  பெரும் பரபரப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.