கோவை, டிச. 6- மாணவர் சேர்க்கையின் போது, மென்மையாக பேசிவிட்டு, தற் போது கட்டண கொள்ளையில் ஈடு படுவதாக குற்றம்சாட்டி பிபிஜி கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவை சரவணம்பட்டி பகுதி யில் பிபிஜி நர்சிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 2023-2024 ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. மாணவர் சேர்க் கையின் போது கல்வி கட்டணம் ரூ.1,20,000 என்றும், அதனை 4 தவ ணைகளாக செலுத்தலாம் எனக் கூறி மாணவர் சேர்க்கை நடைபெற் றதாக கூறப்படுகிறது. இதில் மாண வர்கள் நடப்பாண்டு கட்டணமாக 1,20 ஆயிரத்தில் முன்பணமாக ரூ.40ஆயிரத்தை செலுத்தியுள்ள னர். இதனைத் தொடர்ந்து முதல் பருவ கட்டணத்தை செலுத்தாதால் கல்லூரி நிர்வாகம் பருவ கட்ட ணத்தை செலுத்தினால் மட்டுமே வகுப்புகளுக்கு வர வேண்டும் என எச்சரித்துள்ளனர். இதனால் 6 மாணவ, மாணவிகள் 4 நாட்களாக கல்லூரிக்கு வரவில்லை. இந்நி லையில், மாணவி ஒருவரின் தந்தை கல்லூரி நிர்வாகத்தினரை சந்தித்து, இது குறித்து கேட்டபோது, கல் லூரி பேராசிரியர் மற்றும் நிர்வா கத்தினர் முறையாக பதில் அளிக்கா மல் காவலாளியை வரவழைத்து மாணவியின் தந்தையை தரக்குறை வாக பேசி வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இத்தகவலறிந்த முதலாம் ஆண்டு படிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் அந்த 6 மாணவர்களுக்கு ஆதரவு தெரி வித்து வகுப்புகளைப் புறக்க ணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி பேராசிரியரையும், காவலாளியையும் பணி நீக்கம் செய்தால் மட்டுமே கலைந்து செல் வோம் என்று தொடர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, மாணவர்களு டன் பேச்சுவார்த்தை நடத்திய நிர்வாகம், கல்லூரி பேராசிரியர் மற்றும் காவலாளியின் மீது நடவ டிக்கை எடுப்பதாக, உறுதியளித்த தையடுத்தது. மேலும், புதனன்று கல்லூரி பருவ கட்டணம் குறித்து கல்லூரி உரிமையாளர் முன்னிலை யில் பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம் என்று கூறியதை ஏற்றுக்கொண்டு மாணவர்கள் கலைந்து சென்றனர். இந்நி லையில், வியாழனன்று மாணவர் களை பேச்சு வார்த்தைக்கு அழைக் கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, மீண்டும் மாண வர்கள் கல்லூரி வாயில் முன்பாக தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மாணவிகள் கூறும் போது, கல்லூரியில் அடிப்படை வசதி இல்லை, அதிக கட்டணம் வசூல், முதலாம் ஆண்டு மாண வர்கள் இரண்டாம் ஆண்டிற்கான கட்டணத்தை கட்டச்சொலி நிர்பந் தம் செய்கின்றனர். இரண்டாம் ஆண்டிற்கான கட்டணத்தை முதலாம் ஆண்டிலேயே கட்டினால் தான் தேர்வு எழுத அனுமதிப்ப தாகவும், கட்டணம் கட்டத்தவறும் மாணவ மாணவிகளுக்கு நாள் ஒன்றிற்கு ரூ.50-300 வரை அப ராதம் என்கிற பெயரில் கட்டண கொள்ளை அடிக்கின்றனர். இப்பி ரச்சனைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் தொடர்ந்து வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.