தருமபுரி, மார்ச் 31- குஜராத் முதலமைச்சராக இருந்து மாநில உரிமைகளைப் பேசிய மோடி, தில்லிக்குச் சென்று பிரதமரானதும் மாநிலங்களை அழிக்கத் துடியாகத் துடிக்கிறார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற் றஞ்சாட்டியுள்ளார். தருமபுரி மாவட்டம், தடங்கம் பகுதியில் இந்தியா கூட்டணி வேட் பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், தருமபுரி யில் போட்டியிடும் திமுக வேட்பா ளர் ஆ.மணிக்கு உதயசூரியன் சின் னத்திலும், கிருஷ்ணகிரி தொகுதி யில் போட்டியிடும் காங்கிரஸ் வேட் பாளர் கோபிநாத்-க்கு கை சின்னத் திலும் வாக்களிக்க வேண்டும். நாட் டின் பன்முகத்தன்மையைப் பறை சாற்றும் இந்திய தேசியக்கொடி கம் பீரமாக தில்லி செங்கோட்டையில் பறக்க வேண்டும் என்றால், முதலில் பாஜக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். இந்தியா கூட்டணியை ஆட்சியில் அமர்த்த வேண்டும். மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தியபோது, நாட்டில் திட் டமிட்டு எப்படியெல்லாம் கலவரம் செய்தது பாஜக! சமூகநீதிக் காவ லர் வி.பி.சிங்-கின் ஆட்சியையே பாஜக கவிழ்த்தது. இந்தியா கூட் டணி மூலமாக, தில்லியிலும் நல் லாட்சி நடக்க வேண்டும் என்று தான், பல்வேறு வாக்குறுதிகளைத் தேர்தல் அறிக்கையாக வழங்கியி ருக்கிறோம். பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு கடந்த 10 ஆண்டு களில் செய்த சிறப்புத் திட்டங்கள் என்ன? என்று சொல்ல முடியுமா? பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரும்போது சிறப்புத் திட்டங்க ளைச் சொல்லுங்கள் என்று தொடர்ந்து கேட்கிறோம்? ஒரு மாத மாக நான் கேட்கிறேன். பிரதமரி டம் அதற்கு பதில் இல்லை. மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்து, அதை எதிர்த்த விவசாயிகளை ஏதோ தீவிரவாதி களைப்போல் எப்படி கொடுமைப் படுத்தினீர்கள்? இன்றைக்கும் தலைநகர் தில்லியில் விவசாயி களை நுழைய விடாமல் சாலை முழுவதும் ஆணி அடித்தீர்களே! விவசாயிகளுக்கு நீங்கள் செய் யும் கொடுமை மாதிரி, இந்திய வர லாற்றிலேயே எந்தப் பிரதமரும் செய்திருக்க மாட்டார்கள். ஏன், உலக வரலாற்றில்கூட, எந்த சர்வா திகாரியும் செய்திருக்க மாட்டார் கள். ரபேல் ஊழல், சிஏஜி ஊழல் அறிக்கை, தேர்தல் பத்திர ஊழல் இதற்கெல்லாம் பதில் எங்கே? இதற் கெல்லாம் தேர்தலுக்குப் பின், நீங் கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். 12 ஆண்டு காலம் குஜ ராத் முதலமைச்சராக இருந்து, மாநில உரிமைகளைப் பேசிய மோடி, தில்லிக்குச் சென்று பிரதம ரானதும், மாநிலங்களை அழிக் கத் துடியாகத் துடிக்கிறார். கார்ப்ப ரேட்களுக்கு ரத்தினக் கம்பளம் விரிக்கும் மோடி அரசு, இரத்தம் சிந்தி உழைக்கும் ஏழைகளுக்கு, உதவியாக இருக்கும் 100 நாள் வேலை திட்டத்தை சீரழித்து வேடிக்கை பார்த்தது. தமிழ்நாட்டு மக்கள் 2019 தேர்தலைப் போன்று, இந்தத் தேர்தலிலும் பாஜகவை ஒதுக்கத்தான் போகிறார்கள். பாஜ கவுடன் வெளிப்படையாகக் கூட்டணி அமைத்திருப்பவர்க ளும், கள்ளக் கூட்டணியாகத் தமிழ்நாட்டிற்கு துரோகமிழைக் கும் பழனிசாமி கூட்டமும் தோற்க டிக்கப்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார். இந்த பொதுக்கூட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன் னீர்செல்வம், காங்கிரஸ் கட்சி தலை வர் தங்கபாலு, தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி, மேற்கு மாவட்டச் செயலாளர் சி.பழனியப்பன், தரு மபுரி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணி, கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி காங்கி ரஸ் வேட்பாளர் கோபிநாத், சேலம் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதி, தரு மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி. என்.வி.எஸ்.செந்தில்குமார், கிருஷ் ணகிரி மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.