districts

img

பிரதமர் மோடி திருப்பூர் வருகை: இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

திருப்[பூர், பிப்.28- வங்கதேசத்திலிருந்து இறக்குமதியாகும் ஜவுளி பொருட் களுக்கு வரிவிலக்கு அளித்து திருப்பூர் தொழிலை நசுக்கி  வரும் பிரதமர் மோடி திருப்பூர் வருவதை கண்டித்து தமிழ் நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் கருப்பு கொடி காட்டும்  ஆர்ப்பாட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் விச்சு லெனின்  பிரசாத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வங்கதேசத்திலிருந்து இறக்குமதியாகும் ஜவுளி பொருட் களுக்கு வரிவிலக்கு அளித்து திருப்பூர் தொழிலை நசுக்கி  வரும் பிரதமர் மோடியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப் பட்டது. இதில், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலா ளர் டி.ஆர்.சந்தீப், ஓபிசி மாநில பொதுச் செயலாளர் மஸ்தான்,  சோஜன், இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகிகள் மாணவர்  காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.