districts

img

தொடக்க கல்வி ஆசிரியர்கள் உண்ணாவிரத இயக்கம்

தருமபுரி, ஜன.27- அரசாணை எண்:243ஐ உடனடி யாக ரத்து செய்ய வேண்டும் என  வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க  கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் உண் ணாதவிரத இயக்கம் நடைபெற்றது. தொடக்க கல்வித்துறையில் பணி புரியக்கூடிய 90 சதவிகித ஆசிரியர் களின் பதவி உயர்வை பறிக்கும், அர சாணை எண்:243ஐ உடனடியாக தமி ழக அரசு திரும்பப்பெற வேண்டும். சங்க கூட்டு நடவடிக்கைக்குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் வாய் மொழியாக ஏற்றுக்கொண்டு, அச்சு  மற்றும் காணொளி ஊடகங்களுக்கு தெரிவித்த 12 கோரிக்கைகள் தொடர் பான எழுத்துப்பூர்வமான ஆணை களை உடனடியாக வெளியிட வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி, தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நட வடிக்கைக்குழு சார்பில் சனியன்று உண்ணாதவிரத இயக்கம் நடைபெற் றது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற இந்த  இயக்கத்திற்கு, கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் ரா. சிவக்குமார், எஸ்.அருள்சுந்தரம் ஆகி யோர் தலைமை வகித்தனர். தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் கோ.காமராஜ் துவக்க உரையாற்றினார். இதில்  ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி  மாவட்டச் செயலாளர் எஸ்.கேசவன்,  மாவட்டப் பொருளாளர் எஸ்.மைதிலி சங்கர், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் எம்.பழனி, தொடக்கப்பள்ளி ஆசிரி யர் மன்ற பொதுச்செயலாளர் தியோ டர் ராபின்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற உண்ணாவிரத இயக்கத் திற்கு, கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங் கிணைப்பாளர் சா.மதியழகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆசி ரியர் கூட்டணியின் மாநிலப் பொரு ளாளர் க.சந்திரசேகர் துவக்க உரை யாற்றினார். இதில், தொடக்கப்பள்ளி  ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் கோ.காமராஜ், ஆரம் பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட் டச் செயலாளர் நா.பெரியசாமி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற அமைப்பாளர் ச.சந்திரசேகரன், அ. பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.