கோவை, ஏப்.26- கோவிலில் தங்க நகைக்கு பதி லாக போலி நகைகள் வைத்து மோசடி யில் ஈடுபட்ட கோவில் அர்ச்சகர் கோவையில் கைது செய்யப்பட்டார். கோவை வடவள்ளியில், மருத மலை சுப்பிரமணி சுவாமி திருக்கோவி லுக்கு சொந்தமான ஹரி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, தற்காலிக தினக் கூலி அர்ச்சகர் ஸ்ரீ ஸ்ரீ வத்சாங்கன் என்பவர் கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு தினக்கூலி அர்ச்சகர் பணியில் சேர்ந்து உள்ளார். இந்நிலை யில் கடந்த 23, 24 ஆம்தேதியன்று, இந்து சமய அறநிலை துறை துணை ஆணையர், நகை சரிபார்க்கும் அலுவலர் மற் றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கோவில் நிர்வாகத் தில் உள்ள நகைகளை சரி பார்த்தனர். அப்போது சுமார் 14 கிராம் தங்கத்திலான சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்க தாலி மற்றும் குண்டுமணிகள் திருடப்பட்டு, அதற்கு பதிலாக போலி நகைகளை செய்து வைத்து இருப்பது கண்டுபிடிக்கட் பட்டது. இதுகுறித்து துணை ஆணையர் ஹர்ஷினி வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரி பேரில் அர்ச்ச கர் ஸ்ரீ ஸ்ரீ வத்சாங்கனிடம் நடத்திய விசாரணையில், திருடப் பட்ட நகைகளை பெரிய கடை வீதியில் உள்ள தங்கம் ஜுவல்ல ரியில் விற்று பணத்தை வாங்கி விட்டதாக தெரிவித்து உள் ளார். அந்த நகைகளை பறிமுதல் செய்த காவல் துறையினர் அர்ச்சகர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் விசாரணையில் கடந்த 2023 ஆம் ஆண்டு புதுப்பேட்டையில் கோதண்ட ராமர் கோவிலில் எட்டு கிராம் தங்கம் மற்றும் 7 கிலோ வெள்ளி திருடியதற்காக புழல் சிறையில் சிறை தண் டனை அனுபவித்து உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.