சேலம், நவ.11- கோவில் நிலத்தை ஏலம் எடுக் கச்சென்ற அருந்ததிய மக்களை ஏமாற்றிய சாதி ஆதிக்கவாதியினர் செயலுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண் டனம் தெரிவித்துள்ளது. சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட சப்பாணி பட்டியில் சோமேஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்குள்ள 40 ஏக்கர் விவசாய நிலங்கள் அண்மையில் ஏலம் விடப்பட்டது. பொதுவெளி யில் விடப்பட்ட ஏலத்தை அருந்ததி யர் மக்கள் சார்பாக, அருந்ததிய மக்கள் வாழும் பகுதியையொட் டிய நிலத்தை ஏலம் எடுக்க இருவர் வைப்பு தொகை கட்டியுள்ளனர். ஏலம் எடுக்கும் நாளன்று சென்ற அருந்ததிய இளைஞர்களை கண்டு, பொருக்கமுடியாத சாதி ஆதிக்கவாதிகள் சமாதானம் பேசு வதுபோல் ஏமாற்றி ஏலம் எடுக்க விடாமல் தடுத்துள்ளனர். இதனையடுத்து, ஏலம் எடுத்த சாதி ஆதிக்கவாதிகள் அருந் ததி மக்கள் வாழக்கூடிய குடியி ருப்பு பகுதியில் உள்ள விவசாய நிலத்தை தீண்டாமை வேலி அமைக்க முயற்சித்து வருகிறார் கள். அரசு மானிய நிலத்தில் 50 ஆண்டு காலமாக குடியிருக்கும் அருந்ததியர் மக்கள் வீடுகளை ஏலம் எடுத்த நபர் இடிப்பேன் என மிரட்டி வருவதாக தெரிகிறது. இத னையடுத்து, சம்பந்தப்பட்ட மக்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவல கத்தில் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து புதுப்பேட்டை பகு திக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச் செய லாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.குணசேகரன், நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் கே.ராஜாஜி, மாவட்ட குழு உறுப்பினர் ஜி.கவிதா மற்றும் தமிழ்ச்செல்வன், ஜெயந்தி உள்ளிட்டோர் நேரில் சென்று பிரச் சனைக்குரிய இடத்தை ஆய்வு செய்தனர். இதில், அருந்ததிய மக்களை திட்டமிட்டு ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்து மார்க் சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா கூறுகையில், பாதிக்கப்பட்ட அருந்ததிய மக்களுக்கு பாது காப்பை வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அருந்ததியர் மக்களை கோவில் மானிய நிலத்தை ஏலம் எடுக்காமல் தடுத்து ஏமாற்றியுள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம். சம்பந்தப்பட்ட ஏலத்தை ரத்து செய்து மீண்டும் பொது ஏலத்தை நடத்திட வேண்டும் என ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் வலியு றுத்த உள்ளதாகவும், தீர்வு எட்டப் படவில்லை என்றால், மக்களை திரட்டி இயக்கத்திற்கு செல்ல திட்ட மிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், சாதிய வன்மத்தோடு நடை பெறக்கூடிய ஆதிக்க சாதிகளின் நடவடிக்கைகள் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் நடவ டிக்கை எடுத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.