கோயம்புத்தூர், மார்ச்,5- கோவை பிரஸ் கிளப் பெயரில் இருந்த இரு கடைகளுக்கான மனை களை போலி ஆவணங்கள் மூலம் மோச டியாக பதிவு செய்திருந்த இருவர் மீது கோவை நிலமோசடி பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.
கோவை பிரஸ் கிளப் தனது உறுப்பி னர்களுக்காக 10.36 ஏக்கர் அளவுள்ள நிலத்தை வாங்கி மனைகளாக பிரித்து வழங்கியது. அந்த மனைப்பிரிவில் கடை மனைகளுக்கு என்று இரு மனையிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. அந்த இரு மனைகளையும் கோவை பிரஸ் கிளப்பிற்கு தெரியாமல், கே.வி. அய்யப்பன் மற்றும் வி.முகமது அஷ்ரப் ஆகியோர் கூட்டுச் சதி செய்து, கோவை பிரஸ் கிளப் தலைவர் என்று தலைவர் பதவியில் இல்லாத ஒருவரை கையெழுத்திடச் செய்து மோசடியாக தங்கள் பெயரில் பதிவு செய்திருக்கின்ற னர். மேலும் இதே நபர்கள் தாங்கள் நிர்வாகிகளாக இருக்கும் கோயம் புத்தூர் பிரஸ் என்கிளேவ் வெல்பேர் சோசைட்டி பெயரில், பிரஸ் கிளப்பிற்கு சொந்தமான ஒரு மனையை ஆக்கிர மிப்பு செய்து வைத்திருக்கின்றனர்.
இதுகுறித்து கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவர் ஏ.ஆர்.பாபு கோவை காவல்துறை ஆணையரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த 52 நாட்களாக விரிவான விசாரணை நடைபெற்றது. அதில் காவல்துறை துணை ஆணையர் சுஹாசினி, நில மோசடி பிரிவு உதவி ஆணையர் மனோ கரன், காவல் ஆய்வாளர் சந்தான மூர்த்தி, உதவி ஆய்வாளர் விஜய குமார் உள்ளிட்டோர் விசாரணை நடத்தி னர். விசாரணையில் கூட்டுச் சதி செய்து மோசடியாக ஆவணங்களை தயாரித்து, பிரஸ் கிளப்பிற்கு இழப்பை ஏற்படுத்தி, சுய ஆதாயம் அடையும் வகையில் மோசடியில் ஈடுபட்டிருப்பது உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் ஆவணங்களின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டது.
மேலும் கோயம்பத்தூர் பிரஸ் கிளப்பிற்கு தமிழக அரசு 3000 சதுர அடி நிலத்தை 2000 ஆம் ஆண்டின் சந்தை மதிப்பின் படி நிலம்மாற்றம் செய்து கொடுக்க அரசு ஆணை பிறப்பித்தது. அதனை முகமது அஷ்ரப் மற்றும் கவுதமசுமன் ஆகியோர் தாங்கள் நிர்வாகிகளாக இருந்த கோயம்புத்தூர் ஜர்னலிஸ்ட் வெல்பேர் டிரஸ்ட் பெயரில் முறைகேடாக பதிவு செய்திருப்பதும் உறுதிசெய்யப்பட்டது.
இதனடிப்படையில் வி. முகமது அஷ்ரப் மற்றும் கே.வி. அய்யப்பன் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.