திருப்பூர், பிப்.13 - அரசு ஊழியர், ஆசிரியர்களின் வாழ் வாதார கோரிக்கைகளை நிறை வேற்றக் கோரி ஜாக்டோ ஜியோ சார்பில் பிப்ரவரி 15ஆம் தேதி ஒரு நாள் அடை யாள வேலை நிறுத்தம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இப்போராட்டத்தை வெற்றி பெறச் செய்வதற்காக வேலை நிறுத்த ஆயத்த மாநாடு திருப்பூரில் நடைபெற்றது. திருப்பூர் வடக்கு, தெற்கு பகுதி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் இணைந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அதே போல் ஊத்துக்குளி, அவினாசி, பல்ல டம், காங்கேயம், தாராபுரம், உடுமலைப் பேட்டை, மடத்துக்குளம் ஆகிய வட் டாட்சியர் அலுவலகங்கள் முன்பு அன் றைய தினம் வேலை நிறுத்த ஆர்ப்பாட் டம் நடத்தப்படுகிறது. புதிய பென்சன் திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதி யத் திட்டத்தை அனைவருக்கும் அமல்ப டுத்த வேண்டும், காலவரையரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஊதியம், உயர் கல்விக்குரிய ஊக்க ஊதிய உயர்வினை வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம உதவியாளர்,
ஊர்ப்புற நூலகர், கல்வித்துறை துப்பு றவுப் பணியாளர்கள், எம்ஆர்பி செவிலி யர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பல் நோக்கு மருத்துவமனை பணியாளர்க ளுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தொடக்கக் கல்வித் துறை யில் பணிபுரியும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப் பினை ஏற்படுத்தும் வகையில் வெளியி டப்பட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை அர சாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக சனியன்று மாவட்ட அளவிலான வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்பட்டது. மாவட்ட ஒருங் கிணைப்பாளர்கள் க.ராஜேந்திரன், செ. பாலசுப்பிரமணியம், சோ.சந்திரசேக ரன், த.தங்கபாண்டியன், ஏ.ராணி, மா. பாலசுப்பிரமணியம், வேலுமணி ஆகி யோர் தலைமை ஏற்றனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செய லாளர் பிரபு செபாஸ்டின், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலைவர் ப.கனகராஜ், தமிழ்நாடு முது கலை பட்டதாரி ஆசிரியர் கூட்டணி ஹரி ஹரன், கல்லூரி பேராசிரியர் சங்கத்தின் வேலுமணி, அரசு ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர்.மா.பாலசுப்பிரமணி யன் ஆகியோர் கோரிக்கை உரையாற் றினர். தமிழ்நாடு கிராம சுகாதார செவிலி யர் சங்க மாநிலத் தலைவர் சி.பர மேஸ்வரி உரையாற்றினார். தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் கோ.காமராஜ் நிறைவுரை ஆற்றினார். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி மன்ற நிர்வாகி தங் கவேல் நன்றி கூறினார். இந்த போராட்ட ஆயத்த மாநாட்டில் 120 க்கும் மேற்பட் டோர் பங்கேற்றனர்.