districts

img

கர்ப்பிணிகள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் - நாமக்கல் ஆட்சியர் அறிவுரை

நாமக்கல், செப்.25-  கர்ப்பிணி தாய்மார்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக் கியமாகவும் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ச.உமா , சமூக வளைகாப்பு நிகழ்வின் போது அறிவுறுத்தினார்.  நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி யில் தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் ச.உமா, தலைமையில், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் எ.கே.பி.சின்ராஜ், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில்  ஆகியோர் முன்னிலையில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் ச.உமா பேசியதாவது, கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்பான தாய்மையை உறுதி செய்தல், கர்ப்ப கால பராமரிப்பு குறித்த தகவல்களை பின்பற்ற வேண்டும். கர்ப்பிணிகள் இறப்பு விகிதத்தை குறைத்தல், சிசு மரணத்தை குறைத்தல், குழந்தைகளின பிறப்பு எடை 3 கிலோவாக இருக்க வேண்டியதின் அவசியமாகும்.  மேலும் கர்ப்பிணிகள் கருவுற்ற காலங்களில் 12 கிலோ எடை கூடினால் மட்டுமே 3 கிலோ எடையுள்ள குழந்தைகள் பெற்றெடுக்க முடியும். எனவே, இந்த காலக்கட்டத்தில் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்டு, மருத்துவரின் ஆலோசனைகளை பெற்று, குழந்தையை பெற்றெடுக்க வேண்டுமென வாழ்த்துகிறேன் என மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித்தார்.   இந்த நிகழ்வில், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.