கர்ப்பிணி தற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை
கர்ப்பிணி தற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை சேலம், மார்ச் 14- சேலத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் கர்ப் பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள் ளது. சேலம் மாவட்டம், அழகாபுரம் அருகே உள்ள படை யப்பா நகர், பிடாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வர் சாமிசக்தி (30). தனியார் வங்கியில் பணியாற்றி வரும் இவர், சோளம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த சோபியா (28) என்பவரை கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதனிடையே, சாமிசக்தி மது அருந்திவிட்டு தினமும் மனைவியுடன் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சோபியா, வீட்டு அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். சந்தேகமடைந்த சாமிசக்தி கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சோபியா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உயி ருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சாமிசக்தி சேர்த்துள் ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெ னவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 3 மாத கர்ப் பிணியான சோபியா உயிரிழப்பு தொடர்பாக அழகா புரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி 11 மாதங்களே ஆவதால் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
சிறுமிக்கு பாலியல் தொல்லை நீலகிரி, மார்ச் 14- நீலகிரி மாவட்டம், உதகை ஊரக காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், வசித்து வரும் தம்பதி யினரின் பெண் குழந்தை 2 ஆம் வகுப்பும் படித்து வருகி றார். இந்நிலையில், அச்சிறுமிக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனால், பெற்றோர் அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி பாலி யல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், மருத்துவர் கள் சமூக நலத்துறைக்கும், உதகை ஊரக காவல் நிலை யத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதன் பேரில், சிறுமி மற்றும் சிறுமியின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை செய்ததில், தம்பதியினரின் உறவினரான பெயிண்டர் விஜயராஜ் (29) என்பவர் சிறுமியை பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, வழக்குபதிவு செய்த போலீசார், விஜய ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும், அவரை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி, உதகை கிளை சிறையில் அடைத்தனர்.
புகையிலைப் பொருட்கள் பறிமுதல்
புகையிலைப் பொருட்கள் பறிமுதல் சேலம், மார்ச் 14- சேலம் மாவட்டம், அம்மாப்பேட்டை காவல் துறை யினர் புதனன்று இரவு உடையாப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே வெகுநேரமாக நின்று கொண்டிருந்த காரை சந்தேகத்தின் பேரில் சோதனையிட முயன்றனர். அப் போது காருக்குள் இருந்த 2 பேர் தப்பியோட முயன்ற னர். இதனை பார்த்த போலீசார் தப்பியோட முயன்ற ராஜஸ்தானைச் சேர்ந்த லெட்சமணன் (19) என்பவரை மடக்கி பிடித்தனர். மேலும் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு வர் தப்பியோடி விட்டார். இதைத்தொடர்ந்து காரை சோதனை செய்தபோது காரில் குட்கா, ஹான்ஸ் உட்பட 440 கிலோ எடை கொண்ட புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதன் விற்பனை மதிப்பு ரூ.7 லட்சம் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து புகையி லைப் பொருட்கள் கடத்தி வந்த குஜராத் பதிவெண் கொண்ட அந்த காரையும், புகையிலைப் பொருட்களை யும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில், பெங்களூரு வில் இருந்து ஆத்தூருக்கு புகையிலைப் பொருட் களை கடத்தி சென்றதாகவும், கார் பழுதானதால் அங்கு நிறுத்தி வைத்திருந்த நிலையில் போலீசாரிடம் சிக்கி கொண்டதும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு, தப்பி யோடியவரை தேடி வருகின்றனர்.
“கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகியதால் கொடூரம்” 10 வயது சிறுவனை கிணற்றில் தள்ளிக் கொலை
தருமபுரி, மார்ச் 14- நல்லம்பள்ளி அருகே 10 வயது சிறுவனை கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்த, 12 ஆம் வகுப்பு மாணவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள மிட்டாரெட்டிஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் பொன் னரசு (10) புதனன்று மாயமானார். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள் காணாமல் போன சிறுவனை தேடிய நிலையில், அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் பெற்றோர் புகாரளித்தனர். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி அவரை தேடி வந்தனர். அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவனும், பொன் னரசுவும் ஒன்றாக நடந்து செல்லும் வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் உடன் சென்ற 12 ஆம் வகுப்பு மாணவரை காவல் நிலை யத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அதிர்ச்சி ஊட்டும் வகையில், சிறுவனை நான் வீட்டின் அருகாமையில் உள்ள கிணற்றில் தள்ளி விட்டேன் என்று கூறியுள்ளார். அதனடிப்படையில் காவல் துறையி னர் மற்றும் மற்றும் தீயணைப்பு மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இறங்கி சிறுவனை சடலமாக மீட்ட னர். இதைத்தொடர்ந்து பிரேதத்தை உடல் கூராய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவம னைக்கு போலீசார் அனுப்பி வைத்த னர். மேலும், இச்சம்பவம் குறித்து அப் பகுதி மக்களிடம் போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், இப்பகுதியில் கஞ்சா புழக் கம் அதிகமாக இருக்கிறது. பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாண வர்கள் வரை கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி விட்டனர். கஞ்சா போதை யில் இக்கொடூர சம்பவம் நடைபெற் றுள்ளதாக போலீசார் விசாரணை யில் தெரியவந்துள்ளது.
30 கி.மீ தூரம் செல்ல அனுமதி வழங்குக ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்
உதகை, மார்ச் 14- 30 கிலோமீட்டர் தூரம் வரை ஆட்டோ ஓட்ட அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, உதகை பேருந்து நிலையம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் கள் 600க்கும் மேற்பட்டோர் திடீர் போராட்டத்தில் ஈடுபட் டதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பய ணிகளை ஏற்றி, இறக்குவதற்காக ஆயிரக்கணக்கான வாடகை கார்கள் மற்றும் ஆட்டோக்கள் இயங்கி வருகின் றன. குறிப்பாக, ஆட்டோக்கள் நகர எல்லையில் இருந்து, சுமார் 15 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்துக்கு மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆட்டோக்களுக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ள எல்லையை 30 கிலோமீட்டராக விரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தி, ஆட்டோ ஓட்டுநர்கள், கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர். இதனிடையே, நிர்ணயிக்கப்பட்ட தூரத்திற்கு மட்டுமே ஆட்டோக்களை ஓட்ட அனுமதிக்க வேண்டும் என்று, வாடகை கார் உரிமையாளர்கள் சங்கத்தினர் மறுபுறம் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நீலகிரியில் 30 கிலோமீட்டர் தூரம் வரை ஆட்டோ ஓட்ட அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, வியாழன்று ஏராளமான ஆட்டோ ஒட்டுநர்கள் உதகை பேருந்து நிலையம் முன்பு, திடீரென உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தை பயனளிக்கா ததால், 626 ஆட்டோ ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர். ஆட்டோ ஓட்டுநர்களின் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வெள்ளகோவிலில் 17 வயது சிறுமி கூட்டுப் பலாத்காரம்: அதிமுக ஐடி விங் பொறுப்பாளர் உட்பட 7 பேர் கைது
திருப்பூர், மார்ச் 14 - வெள்ளகோவிலில் 17 வயது சிறுமி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப் பட்டு உள்ளனர். கைது செய்யப்பட் டவர்களில் ஒருவர் மூலனூர் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியில் உள் ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவி லில் கடந்த 9 ஆம் தேதி இரவு வீரக் குமாரசாமி கோவில் தேரோட்ட கலை நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டி ருந்த 17 வயது சிறுமியை கடத்திய 6 பேர் கொண்ட கும்பல் பல இடங்க ளுக்கு அழைத்துச் சென்று அதிகாலை வரை கூட்டுப் பலாத்காரம் செய்து மீண் டும் அதிகாலை கோவில் அருகே விட்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்ததை தொடர்ந்து, சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளகோவில் காவலர்கள் வழக்கு பதிவு செய்து 4 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இவ்வழக்கில் தொடர்புடை யதாக வெள்ளகோவில் காமராஜபு ரத்தை சேர்ந்த பிரபாகர் (32), செம் மான்டபாளையத்தை சேர்ந்த மணிகண் டன் (29), மூலனூர், தொட்டம்பாளை யத்தை சேர்ந்த தினேஷ் (27), வெள்ள கோவில், பாரதிநகரை சேர்ந்த தமிழ் செல்வன் (எ) சதீஸ் (28), வெள்ள கோவில், ஓரம்புபாளையத்தைச் சேர்ந்த நவீன்குமார் (26), வெள்ளகோ வில், சுந்தராண்டிவலசை சேர்ந்த நந்தகுமார் (30), மூலனூர், தொட்டம்பா ளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி (30) என 7 பேரை தனிப்படை போலீ ஸார் கைது செய்து திருப்பூர் நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தொடர்பு டைய மேலும் ஒருவரை போலீசார் தீவி ரமாக தேடி வருகின்றனர். கைது செய் யப்பட்ட தினேஷ் மூலனூர் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியில் உள் ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நிகழ்ந்த பகுதி மற்றும் காவல் நிலையத்திற்கு சென்ற மாதர், வாலிபர் சங்கங்களின் நிர்வாகிகள் குற் றச்சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.
பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கட்டுமானப் பணிகள் - ஆட்சியர் எச்சரிக்கை
நீலகிரி, மார்ச் 14- பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கட்டுமானப் பணி கள் நடைபெற்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருணா எச்ச ரிக்கை விடுத்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்பு மற்றும் வணிக கட்ட டங்கள் கட்டுவதற்கு பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக கட்டுமான சங்கப் பொறியாளர்கள், ஒப்பந்ததா ரர்கள் மற்றும் கட்டட உரிமையாளர்களுடனான ஆலோச னைக்கூட்டம் உதகை கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு, மாவட்ட ஆட்சியர் அருணா தலைமை வகித்தார். அப்போது பேசிய அவர், நீலகிரி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் குடியிருப்பு மற்றும் வணிக கட்டடங்களை கட்டும்போது உரிய அனுமதியின்றி பொதுமக்கள் யாரும் கட்டடம் கட்ட வேண்டாம். உரிய அனும தியின்றி நில அபிவிருத்தி பணிகள் மற்றும் அணுகுசாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டாம். உதகை நகராட்சிக்குட்பட்ட உதகை மரபியல் பூங்கா பகுதி யில், புதனன்று ஏற்பட்ட மண் சரிவு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், தடுப்பு சுவர் கட்டும் பணிக்கு மண் அள்ளும் வேலைகள் மேற்கொள்ளப்பட்டதும், பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி பணி மேற்கொள்ளப்பட்டதும் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியவந்தது. எனவே, இதுபோன்ற நிகழ்வுகளை இனிவரும் காலங் களில் நமது மாவட்டத்தில் தவிர்த்திடும் பொருட்டு உரிய பாதுகாப்பு வசதிகள் ஏதுமின்றி எவ்வித பணிகளையும் மேற் கொள்ள வேண்டாம். மேலும், இதை முறையாக கண்கா ணிக்க சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அலுவலர்க ளுக்கு உத்தரவிடப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்தால் வழங் கப்பட்ட அறிவுரைகளை பின்பற்றாமல், இதுபோன்று பாது காப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் ஏது மின்றி பணிகளை மேற்கொள்ளும் கட்டட உரிமையாளர் கள், சம்மந்தப்பட்ட பொறியாளர்கள், கனரக இயந்திர உரிமையாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் சம்மந்தப்பட் டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்றார். கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடி வேல், கூடுதல் ஆட்சியர் கவுசிக், பேரூராட்சிகள் உதவி இயக் குனர் இப்ராஹிம் ஷா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உத வியாளர் (வளர்ச்சி) மணிகண்டன் மற்றும் கட்டுமான சங்கத்தி னர் பலர் கலந்து கொண்டனர்.