திருப்பூர்/ கோயம்புத்தூர், ஏப்.9 – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் திங்களன்று (ஏப்.8) திருப்பூர் மற்றும் கோயம் புத்தூரில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றினார்.
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயனை ஆதரித்து, வெள்ளியங்காடு நால் ரோட்டிலும், கோவை தேர்நிலைத்திடலில் கோவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி பா.ராஜ்குமார் மற்றும் பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் கே.ஈஸ்வர சாமி ஆகியோரை ஆதரித்தும் உரையாற்றினார்.
இக்கூட்டங்களில் பிரகாஷ் காரத் ஆற்றிய உரைகளின் சாராம்சம் வருமாறு:
பத்தாண்டு கால மோடி ஆட்சி மிகப் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல் பட்டது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பத்தாண்டு கால ஆட்சியில் மேல் மட்டத்தில் இருக்கக்கூடிய ஒரு சதவிகிதம் பேரிடம் இந்தியாவில் 40 சதவீதமான செல்வ வளங்கள் குவிந்துள்ளன. நாட்டில் அதிகப்படியான வேலை வாய்ப்பு உருவாக்குபவையாக சிறு, குறு நடுத்தர தொ ழில்கள் இருக்கின்றன.
திருப்பூராக இருந்தா லும், கோவையாக இருந்தாலும், நாட்டின் எந்தப் பகுதிக்கு சென்றாலும், எம் எஸ் எம் இ என்று சொல்லக்கூடிய சிறு குறு நடுத்தர தொழில் துறையினர் மிக மோசமான பாதிப் பை சந்தித்து வருகின்றனர். மூலப் பொருள் கள் விலை உயர்வு, அவர்களுக்கு தேவை யான கடன் வசதி கிடைக்காதது, ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்ற மோடி அரசின் கொள்கைக ளால் தான் இந்த தொழில் துறையினர் பாதிக் கப்பட்டுள்ளனர். இதற்கு மாநில அரசுகள் காரணமல்ல. எனவேதான் இந்தியா கூட்டணி யில் உள்ள திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் எம் எஸ் எம் இ துறைக்கு முக்கியத்துவம் தரப் படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஊழல் குறித்து யார் பேசுவது?
தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திர மோடியும், பாரதிய ஜனதா கட்சியினரும் இந்தியா கூட்டணி யை ஊழல் கூட்டணி என்கிறார். எந்த முகத்தோடு மோடி இதைப் பேசுகிறார்?
தேர்தல் பத்திரத்தின் மூலம் பாரதிய ஜனதா கட்சி 8,252 கோடி ரூபாய்- அதாவது மொத்தத் தேர்தல் பத்திர நிதியில் 50 சதவிகிதத்திற்கு மேல் வாங்கியிருக்கிறது. அதுவும் பாரதிய ஜனதாவுக்கு கோடிக்கணக்கான ரூபாய் தேர்தல் நிதி கொடுத்ததற்கு பிறகு அந்த நிறு வனங்களுக்கு, காண்ட்ராக்ட், லைசென்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மற்றொருபுறம் நிதி கொடுக்காத நிறுவனங்களுக்கு அமலாக்கத் துறை, வருமான வரித்துறை சோதனை என்று நெருக்கடி கொடுத்து, வழக்கு தொடுத்து, கைது செய்து அதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மூலம் பல கோடி ரூபாய் தேர்தல் நிதி பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத் துள்ளது.
இது சட்ட விரோதமாக பணம் பறிக்கும் செயல். லஞ்சத்தை சட்டப்பூர்வமாக ஆக்கிய செயல். உச்சநீதிமன்றம் இந்த தேர்தல் பத்திர ஊழல் குறித்து சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும்.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், இந்த ஊழல் பற்றி விசாரணை நடத்தி சம் பந்தப்பட்டவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப் படுவார்கள்.
100 மடங்கு அதிகரிப்பு
பாஜகவின் ஆட்சியில் பெரிய பணக்காரர்க ளின் சொத்து 100 மடங்குக்கு மேல் அதிகரித்து இருக்கிறது. ஆனால் இவர்களது நடவடிக்கைக ளில் இந்தியாவின் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஊக்கம் கொடுக்கப்படவில்லை. ஆனால் இத்தகைய தொழில்கள் தான் 12 கோடிப் பேருக்கு இந்தியா வில் வேலைவாய்ப்பை கொடுத்து இருக்கின் றது. தவறான ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலம் மூலப் பொருட்களின் விலை கடுமையான உயர்வை சந்தித்து இருக்கிறது.
பொதுத்துறை நிறுவனங்களை தனி யாருக்கு தாரை வார்ப்பதன் மூலம் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்திருக்கிறது. மின்சார உற்பத்தி, மின்விநியோகம், வங்கிகள், ரயில் வே, விமான சேவை என அனைத்து பொதுத் துறை நிறுவனங்களையும் ஒழிப்பதற்கு பாஜக தயாராக உள்ளது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்த நடவடிக்கைகளை தீவிரப் படுத்துவார்கள்.
இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் சிறு குறு மற்றும் நடுத்தர தொ ழில்களை வலுப்படுத்துவதற்கான திட்டங்க ளை கொண்டு வருவோம் என்ற வாக்குறுதியை கொடுத்துள்ளனர்.
10 லட்சம் காலிப் பணியிடங்கள்
இந்திய அரசின் பணிகளில் 10 லட்சம் காலிப் பணியிடங்கள் இருக்கின்றது. இவற்றை யெல்லாம் நிரப்புவதன் மூலம் இளைஞர்க ளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர முடியும்.
இந்தியா கூட்டணி என்பது ஜனநாயகத்தை யும் மதச்சார்பின்மையையும் பாதுகாப்பதற் காக மட்டுமல்ல; கூட்டாட்சித் தத்துவத்தை பாது காப்பதற்காகவும் தான். எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களுக்கு ஒன்றிய மோடி அரசு கொடுக்க வேண்டிய நிதியை கொடுப் பதில்லை. நிதி கொடுப்பதையே ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள். நிதி பெறுவதற்காகவே எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் போய் கோரிக்கை வைக்க வேண்டி இருக்கிறது.
இந்தியா கூட்டணி என்பது ஜனநாயகத்தை யும் மதச்சார்பின்மையையும் பாதுகாப்பதற் காக மட்டுமல்ல; கூட்டாட்சித் தத்துவத்தை பாது காப்பதற்காகவும் தான். எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களுக்கு ஒன்றிய மோடி அரசு கொடுக்க வேண்டிய நிதியை கொடுப் பதில்லை. நிதி கொடுப்பதையே ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள். நிதி பெறுவதற்காகவே எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் போய் கோரிக்கை வைக்க வேண்டி இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.