தருமபுரி, பிப்.8- வள்ளுவன் விருதுபெற்ற தருமபுரி அரசு கலைக்கல்லூரி உடற்கல்வி இயக்கு நர் கு.பாலமுருகன் பாராட்டப்பட்டார். தருமபுரி அரசு கலைக்கல்லூரி உடற் கல்வி இயக்குநராக முனைவர் கு.பால முருகன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், கல்வி பணியில் மட்டுமின்றி கொரோனா பேரிடர் காலத்தில் இணைய வழியில் யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். இதனை பாராட்டியும், விளையாட்டு துறை யில் மாணவ, மாணவிகளை ஆர்வமுடன் பங்கேற்க வைத்து, பயிற்சி அளித்து சாதனை படைக்க உறுதுணையாக இருப் பதை பாராட்டியும் “சிறந்த ஆசிரியருக் கான” “வள்ளுவன் விருது” பாண்டிச்சேரி யில் வழங்கப்பட்டது. இந்நிலையில், விருதுபெற்ற உடற் கல்வி இயக்குநர் கு.பாலமுருகனுக்கு தருமபுரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் ப.கி.கிள்ளிவளவன், தருமபுரி மாவட்ட யோகாசன சங்க செயலாளர் த.ஜெய பிரியா, மாணவ, மாணவிகள் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.