districts

img

தருமபுரி: மருத்துவ படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

தருமபுரி, பிப்.6- அரசு பள்ளியில் பயின்று 7.5 சத விகித இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேந்த மாணவர்களுக்கு தருமபுரியில் பாராட்டுவிழா நடை பெற்றது. தருமபுரி மாவட்டத்தில், அரசு  பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்று 7.5 சதவீத இட ஒதுக் கீட்டில் கீழ் 35 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். இதைய டுத்து ஓ2 கார்டன் ரெஸ்டாரன்ட் மற்றும் தருமபுரி சமூக அமைப்பு  சார்பில் இம்மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒ2 கார்டன் ரெஸ்ட்ரான்ட் நிர்வாக  இயக்குனர் கார்த்திக் மாணவர்களை வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தருமபுரி மாவட்ட துணை காவல் கண் காணிப்பாளர் வினோத் கலந்து கொண்ட, மாணவர்களுக்கு மருத்துவ கோட், ஸ்டெதஸ்கோப், கேடயம் ஆகியவற்றை வழங்கினார். இந் நிகழ்வில் நீட் ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன், பிரபு, ஞானம்மொழி, மூர்த்தி மற்றும் முனைவர் ஞான மொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.