districts

img

அதிக மதிப்பெண் பெற பயிற்சி

தருமபுரி, டிச.15- அரசு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற மாணவர் களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும் என்று ஆசிரியர் களுக்கு, ஆட்சியர் சாந்தி அறிவுறுத்தினார்.  தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் பங் கேற்ற ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  குணசேகரன், மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு ஆட்சியர் சாந்தி தலைமை தாங்கி பேசுகையில், தருமபுரி மாவட்டத்தில் அரசு பள்ளி களில் 10 மற்றும் 11,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும்  மாணவ-மாணவிகளுக்கு சிறப்பான முறையில் பாடங் களை கற்பிக்க வேண்டும். மாணவர்களுக்கான அரசு நலத் திட்டங்கள் குறித்து உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கல்வி உதவித்தொகைகள் மாணவர்களுக்கு சென்றடைவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். பள்ளி மாணவ-மாணவிகள் பிளஸ்-2 முடித்த பிறகு  உயர்கல்வி கற்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்கு வதற்கு ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம் நான் முதல்வன்  திட்டத்தின் கீழ் சிறந்த பயிற்றுனர்களை கொண்டு பயிற்சி வழங்கப்பட வேண்டும்.  மேலும், அரசு பள்ளிகளின் கழிப்பறைகள் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும். பள்ளி கட்டிடங்களின் உறுதித் தன்மை, மேற்கூரை, சுற்றுச்சுவர் பராமரிப்பு, மின் கசிவு இன்மை ஆகியவற்றில் தலைமை ஆசிரியர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். மாணவ, மாணவிகள் திறனறி  தேர்வுகளை சிறப்பாக எழுதவும், அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை பெறவும் ஆசிரியர்கள் உரிய பயிற்சியை வழங்க வேண்டும் என்றார்.