districts

சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் உலகிலேயே முதன்முறையாக திருப்பூரில் ஒத்திகை ஓட்டம்

திருப்பூர், டிச.2- சாயத்தொழிற்சாலைகளில் பொருத்தும் சாயக்கழிவு நீர் சுத்திக ரிப்பு இயந்திரம் உலகிலேயே முதன் முறையாக திருப்பூரில் ஒத்திகை ஓட் டம் துவக்கி வைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட் டம், கரைப்புதூர் ஊராட்சி, குன்னன் கல்பாளையத்தில் பொது சாய சுத்தி கரிப்பு ஆலையில் புதிய ஜிரோ பர் சண்ட் கெமிக்கல் என்ற இயந்திரத் தின் ஒத்திகை ஓட்டத்தை, மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வெள்ளி யன்று துவக்கி வைத்தார்.  இந்திய மற்றும் ஜெர்மனி தொழில் நுட்ப ஆராய்ச்சி மாண வர்கள் மூலம் தயாரிக்கப்பட்ட சாயத் தொழிற்சாலைகளில் பொருத்தும் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு இயந் திரம் உலகிலேயே முதன்முறையாக திருப்பூரில் ஒத்திகை துவக்கி வைக் கப்பட்டது. இண்டோ ஜெர்மன் அறி வியல் தொழிற்நுட்ப மையம் மூலம்  உதவித்தொகை பெற்று இந்திய  தொழிற்நுட்ப கழகம் சென்னை, ஜெர் மனி, கோயித் பல்கலைக்கழகம் ஆகிய ஆராய்ச்சி பல்கலைக்கழகங் கள் இணைந்தும், தமிழ்நாடு நீர் முத லீட்டு நிறுவனம்,

இப்காண் ஆகிய  தொழிற்சாலைகள் இணைந்து சாயக் கழிவு நீரை சுத்திகரிக்கும் புதிய இயந் திரம் ஒத்திகை பார்ப்பதற்கான முறை யில் தயாரிக்கப்பட்டது. பொதுசுத்தி கரிப்பு நிலையத்தில் பொருத்தப் பட்டு அதற்கான ஒத்திகை தற்போது  நடைபெற்று வருகிறது. இனி வரும்  காலங்களில் சாயக்கழிவு நீர் பாதிப்பு  ஏற்படாது. ஏற்கனவே ஜீரோ டிஸ் சார்ச் நடைமுறையில் உள்ளது. மேலும் இந்த இயந்திரந்தின் மூலம்  சாயக்கழிவுகளில் ஏற்படும் திடக்கழி வுகளை முற்றிலும் அகற்றும் வகை யில் முயற்சி செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் சிறிய சாயத் தொழிற்சாலைகள் மூலம் இத்தொ ழிற்நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த கட்டணத்தில் சுத்திகரிக்க முடியும் என தொழிற்நுட்ப வல்லுநநர் கள் தெரிவித்துள்ளனர். இந்த சுத்தமான/பசுமை தொழில் நுட்பம் இரசாயனங்கள் பயன்படுத் தாமல் பாதுகாப்பாக நிறத்தை அகற் றுவதை உறுதிசெய்கிறது, கரிமப் பொருட்களை அகற்றுவதுடன் சுற் றுச்சூழலுக்கான கவலைகளையும் நிவர்த்தி செய்கிறது. குறிப்பிடத்தக்க  வகையில், உயிரியல் முறைகள் மற் றும் குளோரினேஷன் போன்றவற் றில் கசடு மற்றும் நச்சுத் துணைப் பொருட்கள் உருவாவதைத் தடுக்கி றது, சுற்றுச்சூழல் நட்பு கழிவுநீர் சுத்தி கரிப்புக்கான புதிய தரநிலைகளை அமைக்கிறது. தொழில்நுட்பமானது பெரிய நிலத் தேவைகள்,

அதிக  காற்றோட்டம், திறன் மற்றும் உயிரி யல் கழிவு நீர் சுத்திகரிப்புக்கான நேரத்தைக் குறைக்கும். உப்புத்தன் மையை அகற்றுவதற்கான கொள் ளளவு டீயோனைசரை உருவாக்கப் பட்டுள்ளது. இது முறையே உவர்நீ ருக்கான ஆர்.ஒ அமைப்பு மற்றும் கோதே இன்ஸ்டிடூட் சுற்றுச்சூழல் நச் சுத்தன்மை அடிப்படையிலான கழிவு நீர் தரங்களை மாற்றும். இந்த திட்டம் ஐஜிஎஸ்டிசி அழைப் பின் 2+2 திட்டத்தின் ஒரு பகுதியாகும்.   2018, சுற்றுச்சூழல் தொழில்நுட்பங் களை மேம்படுத்துவதில் சர்வதேச  ஒத்துழைப்பைக் காட்டுகிறது. இந்தோ-ஜெர்மன் அறிவியல் மற்றும்  தொழில்நுட்ப மையத்தின் நிதி இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் முக் கிய பங்கு வகிக்கிறது. இந்த நிகழ்ச்சியில். பேராசிரியர்  இந்துமதி எம்.நம்பி  ஐஐடி மெட்ராஸ்,  சென்னை, பேராசிரியர் ஹென்னர்  ஹோலர்ட் - கோதே பல்கலைக்கழ கம் ஜெர்மனி, முனைவர் கிறிஸ்டியன்  லின்னார்ட்ஸ்- ஆர்டபல்யுடிஎச் ஆச் சென் ஜெர்மனி, எல்.சாஜித் ஹுசைன்  தலைமை இயக்க அதிகாரி, தலைமை அலுவலர் (தமிழ்நாடு நீர்  முதலீட்டு நிறுவனம்)  சஜித் உசேன்  மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய  செயற்பொறியாளர்கள் சாமிநாதன், சரவணன் மற்றும் ஈரோடு, கரூர்,  திருப்பூர் தொழிற்சாலை உரிமையா ளர்கள் மற்றும் தொடர்புடைய துறை  அலுவலர்கள் பலர் கலந்து கொண்ட னர்.