சட்டப்படிப்பு நுழைவுத்தேர்விற்கான பயிற்சி
ஈரோடு, நவ.2- சட்டப்படிப்பு படிப்பதற்கு அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத்தேர்விற்கான பயிற்சி இலவசமாக வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை தாட்கோ வழங்கி வருகிறது. அதனடிப்ப டையில் சட்ட பல்கலைக்கழகங்களில் சட்டப்படிப்பு படிப்ப தற்கு அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழை வுத்தேர்விற்கான பயிற்சி இலவசமாக அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை பெற 18 முதல் 25 வயது நிரம்பிய 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் மற்றும் நடப்பாண்டு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை இணையதளம் வழியாகவும், தேர்வு நேரிடையாகவும் நடைபெறும். இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணாக்கர்களுக்கும், சட்டப்படிப்பு படிப்பதற்கு ஏனைய நுழைவுத் தேர்வுகளுக்கும் இலவசமாக பயிற்சிகள் வழங் கப்படும். வெற்றிபெறும் பட்சத்தில் அடுத்த கட்ட தேர்வு களான நேர்காணல், குழு விவாதம், எழுத்துத் தேர்வு ஆகிய வற்றிற்கும் பயிற்சிகள் வழங்கப்படும். மேற்கண்ட தேர்விற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்கள் இலவ சமாக பயிற்சி பெற www.tahdco.com என்ற இணையத ளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சிக்கான கட்ட ணம் தாட்கோவால் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
பலகார கடைகளுக்கு எச்சரிக்கை
ஈரோடு, நவ.2- தீபாவளி பண்டிகைக்கான பலகாரம் தயாரிப்போர் மற்றும் விற்பனை செய்வோர் அனைவரும் உணவு பாதுகாப் புத்துறை உரிமம் பெற வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ஈரோடு, சேலம் மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்டத்தில் இனிப்பு, காரம் தயாரிப்போர், பலகார சீட்டு நடத்துவோர் உட்பட அனைத்து உணவு தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்து, உரிமம் அல்லது பதிவுச்சான்று பெற்றிருக்க வேண்டும். தரமான மூலப் பொருட்களை பயன்படுத்தி, இனிப்பு, காரம் ஆகியவற்றை சுகாதாரமாக தயாரிக்க வேண்டும். கலப்பட பொருட்கள், தரம் குறைந்த எண்ணெய், ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெய், நெய், டால்டா உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தக் கூடாது. பலகாரங்களில் கூடுதல் வண்ணம் சேர்ப்பதற்காக, அளவுக்கு அதிகமாக நிறமிகள், செயற்கை வண்ணங்களை சேர்க்கக்கூடாது. அவ்வாறு சேர்த்த கண்டறியப்பட்டால், உணவு பாதுகாப்புத்துறையால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களில் ஈ, பூச்சிகள், கிருமி தொற்று ஏற்படாதவாறு சுத்தமாக, சுகாதா ரமாக வைத்து விநியோகிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொட்டலமிட பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், பண்டிகை கால இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் குறித்த புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்பலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ்: தயாராகும் பிரம்மாண்ட ‘கேக்’
கோவை, நவ.2- கோவை மாவட்டம், சூலூரை அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு கேக் தயாரிக்கும் பணி துவங்கி யுள்ளது. 45 நாட்கள் பதப்படுத்தி கேக் தயாரிக் கப்பட உள்ளது. வருடந்தோறும் பிரம்மாண்ட அளவிலான கேக் தயாரிப்பதில் நட்சத்திர விடுதி முன்னோடியாக இருந்து வரும் நிலை யில், கேக் மிக்சிங் செய்யும் பணி புதனன்று துவங்கியது. 50 கிலோ உலர் பழங்கள், திராட்சை சாறு உள்ளிட்ட பொருட்கள் கலந்து இந்த கேக் தயாரிக்கப்பட உள்ளது. 45 நாட்களுக்கு பிறகு சுமார் 60 கிலோ அள விற்கு கேக் வடிவமைக்கப்பட உள்ளது. இதற்காக உலர் பழங்களை ஒட்டுமொத் தமாக கலவை செய்வதற்காக 40 சமையல் கலைஞர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர். இதுகுறித்து நிகழ்ச்சியில் பங்கேற்ற டாக்டர் மாதேஸ்வரன் என்ப வர் கூறுகையில், உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்காத வகையில் கேக் செய்யப்ப டவுள்ளது, இந்த கேக்கை சர்க்கரை நோயா ளிகள் கூட சாப்பிடலாம், என்றார். மேலும், நட்சத்திர விடுதியின் தலைமை சமையல் கலை நிபுணர் அருள்செல்வன் கூறு கையில், 50 வகையான பழங்கள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த கேக், கிறிஸ்துமஸ் தினத்தன்று பொதுமக்களுக்காக காட்சிக்கு வைக்கப்படவுள்ளது, என்றார்.
குறைதீர் கூட்டம்
ஈரோடு, நவ. 2- ஈரோடு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறி யாளர் தலைமையில் ஈ.வி.என் சாலையில் உள்ள கோட்ட அலுவலகத்தில் வருகின்ற 8ஆம் தேதி காலை 11 மணியளவில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஈரோடு சோலார், கணபதிபாளையம், கொடு முடி, சிவகிரி, கஸ்தூரிபா கிராமம், அரச்சலூர், எழு மாத்தூர், மொடக்குறிச்சி, அனுமன்பள்ளி, முள்ளாம் பரப்பு உள்ளிட்ட பகுதி களைச் சேர்ந்த மின் பயனீட் டாளர்கள் தங்கள் குறை கள், கோரிக்கைகளை தெரி வித்து தீர்வு பெறலாம் என மின்வாரிய சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.
தலைமறைவு கைதி சரண்
கோவை, நவ.2- பல்வேறு குற்ற வழக்கு களில் தொடர்புடையவர் கோவை நீதிம்னறத்தில் சரணடைந்தார். கோவை மாவட்டம், சரவ ணம்பட்டி பகுதியைச் சேர்ந்த வர் சண்முகம். இவர் மீது சரவணம்பட்டி உட்பட பல்வேறு காவல் நிலை யங்களில் கொலை, கஞ்சா கடத்தல் உட்பட 15 வழக் குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் தொடர் பாக சண்முகத்தை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்து வந்த சண்முகம், தனது வழக்கறிஞருடன் கோவை நீதிமன்றத்தில் சரண டைந்தார். இதனிடையே சண்முகத்தின் குடும்ப உறுப்பினர்கள் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்து விடுவதாகவும், சண்முகத்தை‘என்கவுன்டர்’ செய்து விடுவதாகவும் போலீ சார் மிரட்டியதால், பயந்து நீதிமன்றத்தில் சரண டைந்ததாக கூறப்படுகிறது.
தானியங்கி சிக்னல் அமைக்க கோரிக்கை
உடுமலை, நவ.2- குடிமங்கலம் நால் ரோட்டில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில், தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலையிலிருந்து திருப்பூர் செல்லும் சாலையும், பொள்ளாச்சியில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையும் குடி மங்கலம் பகுதியில் இணையும் இடம் நால் ரோடு பகுதி யாக உள்ளது. பொள்ளாச்சியிலிருந்து குடிமங்கலம் நால் ரோடு வழியாக தாராபுரம், கரூர் மற்றும் ஈரோடு செல்ல வும், உடுமலை மற்றும் மூணாறு பகுதியிலிருந்து பல்லடம், திருப்பூருக்கு வேலைக்கு செல்ல போக்குவரத்து அதிகமாக பயன்படுத்தும் சாலையாக குடிமங்கலம் நால் ரோடு உள்ளது. மேலும், குடிமங்கலம் பகுதியில் தான் காற்றாலை நிறுவனங்களின் அலுவலகம் மற்றும் அதன் வாகனங்கள் அதி கமாக பயன்படுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தொடர் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, விபத்துகள் ஏற் படுவதை தடுக்கும் வகையில், குடிமங்கலம் நால் ரோடு பகுதி யில் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நவ.6 முதல் கோமாரி நோய் தடுப்பூசி
திருப்பூர், நவ.2- திருப்பூர் மாவட்டத்தில் கால்நடை பரா மரிப்புத்துறை சார்பில், நவ.6 முதல் 21 நாட்க ளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் அனைத்து கால்நடைகளுக்கும் தடுப் பூசி செலுத்தப்படவுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, கிராமப்புற வளர்ச்சி, விவசாயிகளின் கூடுதல் வரு வாய் என்பது கால்நடைகளை நம்பியே உள்ளது. இக்கால்நடை வளர்ப்பில் கால் மற்றும் வாய் நோய் அல்லது காணை என்றும் அழைக்கப்படும் கோமாரி நோய் வைரஸ் நச்சுயிரியால் ஏற்படுகிறது. பொதுவாக, கலப்பின மாடு களை, கால் மற்றும் வாய் கோமாரி நோய் அதிகம் தாக்கி, கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்தும். இந்நோயால், கறவை மாட்டில் பால் உற்பத்தி குறையும், சினை பிடிப்பு தடைபடும். எருதுகளின் வேலைத்திறன் குறையும். இளங்கன்றுகளின் இறப்பு சதவி கிதம் உயரும். அதனால் கறவை மாடுக ளுக்கு கோமாரி நோய் தாக்காமல் இருக்க, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஆறு மாதத்திற்கு ஒரு முறை என ஆண்டுக்கு இரண்டு முறை, இலவசமாக அனைத்து கால் நடைகளுக்கும் (பசுவினம் மற்றும் எருமை யினம்) 100 சதவிகிதம் தடுப்பூசி போடப் பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டில் நவ.6 முதல் 21 நாட்களுக்கு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமப் புறங்கள், குக்கிராமங்கள் மற்றும் நகர் புறங்களில் உள்ள அனைத்து கால்நடைக ளுக்கும், இலவசமாக தடுப்பூசி செலுத்தப் படவுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து கால்நடைகளுக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தி பயனடையே வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோவை: லாரி மோதி ரயில்வே கேட் சேதம்
கோவை, நவ.2- கோவை அருகே லாரி மோதி ரயில்வே கேட் சேதமடைந்த நிலையில் ரயில் தாமத மாக சென்றன. கோவை - மேட்டுப்பாளையம் ரயில்வே வழித்தடத்தில் நீலகிரி எக்ஸ்பிரஸ் உட்பட பயணிகள் ரயில் தினந்தோறும் பத்து முறைக் கும் மேல் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நி லையில் செவ்வாயன்று மாலை சுமார் 7 மணி யளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளக்கிணறு ரயில் தண்டவாளத்தை கடந்து சரவணம்பட்டி நோக்கி செல்ல இருந்த லாரி ஒன்று, வெள்ளக்கிணறு ரயில்வே கேட்டை கடக்கும் போது உயர்த்தியவாறு இருந்த கேட்டின் பக்கவாட்டில் மோதியுள் ளது. இதில் ரயில்வே கேட் பாதி சேதமடைந் தது. இதனால், ரயில்வே ஊழியர்கள் உடனடி யாக அந்த கேட்டுக்கான அனைத்து இணைப் புகளையும் துண்டித்து விட்டு கோவை மற் றும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையங் களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைய டுத்து, மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி செல்லும் பயணிகள் ரயிலை தாமதமாக வரும்படி தகவல் அளித்ததால், மேட்டுப்பாளையத்தில் இருந்து ரயில் தாமத மாக புறப்பட்டு சென்றது.
போக்குவரத்து நெரிசல்
தருமபுரி, நவ. 2- பாலக்கோடு நகரில் தினந் தோறும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் என 200க்கும் மேற்பட்ட பேருந்து களும், அதிகப்படியான ஆட் டோக்களும் இயங்கி வரு கின்றன. இதனால் பாலக் கோடு நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகம் நிறைந்த பகுதியாக இருந்து வருகி றது. மேலும், பள்ளி வாகனங் கள் உள்ளிட்டவை வரும் போது, போக்குவரத்து என் பது முற்றிலும் பாதிப்பதாக குற்றம் சாட்டும் அப்பகுதி பொதுமக்கள், போக்குவ ரத்து நெரிசலை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் துரித நட வடிக்கை மேற்கொள்ள வேண் டும் என கோரிக்கை விடுத் துள்ளனர்.