districts

img

இபிஎப் பென்சன் விண்ணப்ப கால அவகாசத்தை நீட்டிக்க பி.ஆர்.நடராஜன் எம்.பி., வலியுறுத்தல்

கோவை, பிப்.27- கோவை வருங்கால வைப்பு நிதி  இபிஎப் பென்சன் விண்ணப்ப கால  அவகாசத்தை நீட்டிக்க வலியுறுத்தி  கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், ஒன்றிய அமைச் சர்களுக்கு கடிதம் மூலம் வலி யுறுத்தியுள்ளார். இதுகுறித்து மத்திய தொழில் மற்றும் ஐவுளி துறை அமைச்சர்களுக்கு தனித்தனி யாக எழுதியுள்ள கடிதங்களின் சாரம்சம்  வருமாறு, 3.03.2023 அன்றைய தேதியின் அடிப் படையில் அதிக பிஎப் ஓய்வூதியத்திற்கான உரிமைகோரல் படிவத்தை சமர்ப்பிக்க கடைசி தேதியை நீட்டிக்குமாறு 25 ஆயிரத் துக்கும் மேற்பட்ட ஜவுளி, பிற தொழில்துறை தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் பிரதி நிதி சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளது. இவர்களில், பெரும்பாலான ஓய்வூதியதா ரர்கள் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள். உட னடியாக தகவல் அறிய இயலாத நிலை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள். ஆகவே இந்த செய்தி இபிஎப் அமைப்புகளின் மூலம் அவர்களை சென்றடைய கூடுதல் கால அவ காசம் வேண்டும்.   எனவே, அதிக பிஎப் ஓய்வூதியக் கோரிக்கைப் படிவங்களை ஆன் லைனில் சமர்ப்பிப்பது பற்றிய தகவ லறியாத விபரங்கள் இல்லாத இபிஎப் சந்தாதாரர்களால், செயல் முறையை குறுகிய காலத்தில்  முடிக்க முடியாது. மேலும், இபிஎப் ஓய்வூதியம் பெறுவோர் மிகவும்  சிரமத்தில் இருப்பவர்களாக உள்ளனர். ஆகவே, தொழிற்சங்கங்களின் கோரிக்கை களை பரிசீலிக்கும்படி கேட்டுக்கொள்கி றேன். மேலும், சங்கங்களின் கூட்டு அறிக் கையை இபிஎப்ஓ இணையதளத்தில் பதி வேற்றலாம், தாங்களும் தேதியை மாற்றி அறி விக்க வேண்டும் எனவும், இந்த அறிவிப் பின் மூலமாக விண்ணப்பங்களை  சமர்ப்பிப்ப தற்கான கடைசி தேதியை கூடுதலாக்க வேண் டும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், மே 3 ஆம் தேதி வரை  கால நீட்டிப்பு செய்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த கால அளவும் போதாது; மேலும் கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.