districts

img

தகவல்களை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்

கோவை, ஜூன் 28- ரிசர்வ் வங்கி முறையான தகவல்களை மாநிலங்களுக்கும், வங்கி தலைமையக அதி காரிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என கோவை மாவட்ட அளவிலான வங்கித்துறை வளர்ச்சி குறித்த கூட்டத்தில் பி.ஆர்.நடராஜன் எம்.பி., வலியுறுத்தி உள்ளார். கோவை மாவட்ட முதன்மை வங்கியின் மாவட்ட அளவிலான வங்கித்துறை வளர்ச்சி கள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில், வங்கிகளின் செயல்பாடுகள் 2022 – 2023 ஆண்டிற்கான திட்டத்தில் செயல் படுத்தப்பட்ட விவரங்கள், தொழில் துறை,  கல்வி மற்றும் மாவட்ட வளர்ச்சி நடவடிக்கை களை குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

குறிப்பாக, எம்எஸ்எம்இ தொழில் கடன்  குறிப்பிட்ட இலக்கை எட்டி இருப்பதாகவும், அதேபோல கல்வி கடன் கடந்தாண்டில் மட் டும் ரூ.170 கோடி அனைத்து வங்கிகளும், உள்ளூர் மற்றும் அயல்நாடுகளில் பயிலும் மாணவர்கள் என அனைவருக்கும் வழங்கப் பட்டிருப்பதாக தெரிவித்தனர். அதேபோல, அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்தில் கடன் பெற்றவர்கள் முறையாக கடன் களை திருப்பி செலுத்தியுள்ளதாக வங்கி மேலாளர்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்த னர். இக்கூட்டத்தில் ஆலோசனைக்குழு தலை வரான கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், கடந்தாண்டு திட்டத்தில் வழங்கப்பட்டிருக்கிற விசயங் களை குறிப்பிட்ட அதிகாரிகள், நடப்பு கல்வி யாண்டில் (2023 - 2024 ஆம் ஆண்டு) கல்விக் கடனுக்கான இலக்கை குறிப்பிட்டு தெரிவித் திருக்க வேண்டும். அதேபோல, மாநில அரசு வெண்டிங் மிஷின்ஸ் எனப்படும் தானியங்கி கைப்பை இயந்திரங்களை பல கோடி ரூபாய் முதலீட்டில் செலவு செய்து மாநிலங்களில் வைத்துள்ளது. அதில் பத்து ரூபாய் நோட்டை செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும் என தெரி விக்கப்பட்டது. ஆனால், ரிசர்வ் வங்கி கடந்த இரண்டு ஆண்டுகளில் பத்து ரூபாய் நோட்டை அச்சடிக்கவே இல்லை. ரிசர்வ் வங்கி இந்த தகவலை முறையாக மாநிலங்களுக்கும், அனைத்து வங்கி தலைமையகங்களுக்கும் தெரிவிக்கப்படவில்லை என்பதை பி.ஆர்.நட ராஜன் எம்.பி., சுட்டிக்காட்டினார். எனவே, கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அதிகாரி கள் குறிப்பிட்ட விஷயத்தை ரிசர்வ் வங்கி  தலைமை குழுவிற்கு தெரிவித்து, முறை யான தகவல்களை வங்கிகளோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

கோவை மாவட்ட திட்டக்குழு கூட்டம்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் புதனன்று மாவட்ட திட்டக்குழு கூட்டம், தலை வர் சாந்திமதி அசோகன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவரும், மாவட்ட  ஆட்சியருமான கிராந்திகுமார் பாடி முன்னிலை வகித்தார். இதில் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட திட்ட  அலுவலர் வி.பாஸ்கர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் உட்பட உள்ளாட்சி பிரதிநிதி கள் கலந்து கொண்டனர். மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்தலில் வெற்றி பெற்ற வர்களின் அறிமுகக்கூட்டமாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு அரசு மாவட்ட அளவிலான வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி, ஒருங்கிணைத்து மற்றும் செயல்படுத்திட ஏதுவாக மாவட்ட திட்டக்குழுக்களை அமைத்துள்ளதற்கு தமிழ்நாடு அர சுக்கு மாவட்ட திட்டக்குழு சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.