districts

img

பொங்கலூர் ஒன்றியப் பகுதிகளில் பி.ஆர்.நடராஜன் எம்.பி., நேரில் ஆய்வு

திருப்பூர், ஜூலை 12 – கோவை நாடாளுமன்றத் தொகு திக்கு உட்பட்ட பொங்கலூர் ஒன்றிய  கிராமப் பகுதிகளில் பி.ஆர்.நட ராஜன் எம்.பி. வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்து, பொது மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கோவை தொகுதி எம்.பி. பி. ஆர்.நடராஜன் திங்கள், செவ்வாய் இரு நாட்கள் பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் சந்திப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு நிகழ்ச்சியில் பங் கேற்றார். இரண்டாம் நாளான செவ் வாயன்று கேத்தனூர், எலவந்தி, கள் ளிப்பாளையம், தெற்கு அவிநாசிபா ளையம் மற்றும் பொங்கலூர் ஊராட் சிகளில் மக்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெற்றார். கேத்தனூர் ஊராட்சியில் அரசு  மேல்நிலைப் பள்ளிக்கு தேவையான  தளவாட சாமான்கள், குடிநீர் தொட்டி  உள்ளிட்ட தேவைகள் குறித்து அப் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை மனு  அளித்தனர். அதேபோல் தூய்மைக் காவலர்களிடம் அவர்களது ஊதி யம், பணி நிலைமைகள் குறித்து  அவர் கேட்டறிந்தார். மேல்நிலைத் தொட்டி கட்ட திட்ட மதிப்பீட்டு அறிக்கை தயாரித்துக் கொடுக்கும்ப டியும், சுமார் ரூ.10 லட்சம் நிதியை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து  வழங்குவதாகவும் தெரிவித்தார். அதேபோல் எலவந்தி ஊராட்சி பகுதியில் மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றார். இதைத் தொடர்ந்து வே.கள்ளிபாளையம் ஊராட்சியில் மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெற்றார்

வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

அத்துடன் கள்ளிபாளையம் நியா யவிலைக் கட்டிடத்தையும் நேரில் பார்வையிட்டு அங்கு பணியாற்றும் பணியாளரிடம் கட்டிடத்தின் தன்மை  குறித்து கேட்டறிந்தார். துத்தாரிபா ளையம் பகுதியில் நூறு நாள்  வேலைத் திட்டத் தொழிலாளர்களி டம் அவர்களது வேலை மற்றும் ஊதி யம் குறித்து கேட்டறிந்தார். அதே கிரா மத்தில் வேறொரு பகுதியில் அவர்  மரக்கன்றுகள் நட்டார். இதைத் தொடர்ந்து தெற்கு அவி நாசிபாளையம் ஊராட்சிமன்ற அலு வலகத்தில் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றார். அப் போது ஏற்கெனவே பட்டா வழங்கிய  இடத்தை அளந்து தராமல் இருப்பது குறித்து முறையிட்ட பெண்கள், இடத்தை அளந்து தரும்படி கோரிக்கை விடுத்தனர். இது பற்றி வருவாய் ஆய்வாளரிடம் நிலத்தை அளந்து தர பரிந்துரைத்தார். மூன்று நாட்களில் நிலம் அளந்து தருவதாக அவர் கூறினார். பின்னர் பொங்கலூர் ஊராட்சி அலுவலகத்திற்குச் சென்று நூறு  நாள் வேலைத் திட்ட தொழிலாளர் களைச் சந்தித்து அவர்களது கோரிக் கைகளைக் கேட்டறிந்தார். மேலும் பொங்கலூர் ஒன்றியப் பகுதிகளில் குடிநீர் பிரச்சனை கடுமையாக இருப் பது பற்றி பொது மக்கள் முறையிட் டனர்.  பிற்பகல் உகாயனூர், பெருந் தொழுவு ஆகிய ஊராட்சி அலுவல கங்களிலும், சேமலைக்கவுண் டன்பாளையம் கிராம நிர்வாக அலுவ லகத்திலும், நாச்சிபாளையம் ஊராட் சியிலும் கிராம மக்களைச் சந்தித்து அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். அனைத்து பகுதிகளி லும் பொது மக்கள் முதியோர் ஓய்வூ தியம், குடிநீர் பிரச்சனை, கழிப்பிட  வசதி குறித்து கோரிக்கைகள் அளித் தனர். மேலும் பள்ளிக்கூடங்க ளுக்குத் தேவையான அடிப்படை வச திகள் செய்து தரவும் கோரினர்.

மாற்றுத் திறனாளிக்கு வாகனம்

நாச்சிபாளையம் ஊராட்சியில் மாற்றுத் திறனாளி செல்வராணி என்ப வருக்கு ரூ.80 ஆயிரம் மதிப்பில் வாக னம் வாங்குவதற்கும் நிதி ஒதுக்கி அறி வித்தார். அதற்குரிய ஆணை புதன்கி ழமை வழங்கப்பட்டு உடனடியாக வாகனம் வாங்கித் தரப்படும் என்றும்  அறிவித்தார். இந்த சந்திப்பின்போது உரை யாற்றிய பி.ஆர்.நடராஜன் எம்.பி.,  “மக்களின் கருத்துகளைக் கேட்ட றிந்து அவற்றை அரசின் கவனத் துக்கு கொண்டு செல்வதாகவும், நிதி  ஒதுக்குவது தொடர்பாக வரப்பெற்ற  கோரிக்கைகளில் முக்கியப் பணிக ளுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக்குவதாகவும் அவர் கூறி னார். ஏற்கெனவே கடந்த இரண் டாண்டுகள் தொகுதி மேம்பாட்டு நிதி யை ஒன்றிய அரசு நிறுத்திவிட்ட நிலையில் வரக்கூடிய நிதியில் இருந்து பணிகளுக்கு பாரபட்சம் இல் லாமல் நிதி ஒதுக்குவதாகக் கூறி னார்.

மேலும் வரக்கூடிய 18ஆம் தேதி  நாடாளுமன்ற கூட்டம் நடைபெற உள்ள நிலையில் நிதி ஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்பி மக்களது கோரிக்கைகளுக்கு உரிய நிதி பெற  முயற்சிப்பதாகவும் அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது பொங்க லூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர்  எஸ்.குமார், பல்லடம் வட்டாட்சி யர், பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய  ஆணையர் மற்றும் எலவந்தி ஊராட் சிமன்றத் தலைவர் கோபாலகி ருஷ்ணன், கள்ளிபாளையம் சாந் தினி சம்பத்குமார், தெற்கு அவிநாசி பாளையம் ஒன்றிய கவுன்சிலர் பாலு,  பொங்கலூர் ஊராட்சிமன்றத் தலை வர் சத்யா பாலசுப்பிரமணியம், உகா யனூர் தலைவர் ரேவதி கனகராஜ்,  பெருந்தொழுவு ஊராட்சித் தலைவர்  ரவிச்சந்திரன், தொங்குட்டிபாளை யம் தலைவர் பிரியா நடராஜன், அல குமலை தலைவர் தூயமணி, கண்டி யன்கோவில் ஊராட்சித் தலைவர் கோபால், நாச்சிபாளையம் ஒன்றிய  கவுன்சிலர் ஜெ.சி.பி. பாலு, கேத்த னூர் ஹரிகோபால் உள்பட உள் ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்று பி. ஆர்.நடராஜனுக்கு வரவேற்பளித்து தங்கள் பகுதி கோரிக்கைகளை முன் வைத்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.உண் ணிகிருஷ்ணன், சி.மூர்த்தி, ஆர்.கு மார், மாவட்டக்குழு உறுப்பினர் ஜி. சம்பத், பல்லடம் ஒன்றியச் செயலா ளர் ஆர்.பரமசிவம், பொங்கலூர் ஒன் றியச் செயலாளர் பாலன், ஒன்றியக் குழு உறுப்பினர் சிவசாமி, மற்றும் திமுக ஒன்றியச் செயலாளர்கள் அசோ கன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட தோழ மைக் கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.