கோவை, பிப்.23- கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, புலியகுளம் பகுதியில் நியாய விலை கடை கட்ட அடிக்கல் நாட்டப் பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நியாய விலை கடைகள், சமுதாய நலக்கூடங்கள், தண்ணீர் தொட்டிகள், சிறுவர் பூங்கா என எண்ணெற்ற நலத்திட்டங்கள் முடிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதியையும் முழுமையாக மக்கள் நலத்திட் டங்களுக்கு செலவு செய்ய வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை பி.ஆர்.நடராஜன் எம்பி., மேற்கொண்டு வருகிறார். இதன்தொடர்ச்சியாக, கோவை புலி யகுளம் 64 ஆவது வார்டுக்கு உட்பட்ட பங்க ஜாமில் பிரதான சாலையில் நியாய விலைக் கடை அமைக்க நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்க வேண்டும் என கோரிக்கையை பி.ஆர்.நடராஜன் எம்பி., யிடம் வைத்தனர். இதனை அப்பகுதி மாமன்ற உறுப்பினர் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி யினர், பொதுமக்கள் வலியுறுத்திய நிலை யில், நியாய விலை கடை கட்ட, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.21 லட்சத்தை ஒதுக்குவதற்கான ஒப்பு தலை வழங்கினார். நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டதை தொடர்ந்து, அதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளியன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 64 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயபிரதா தேவி, உதவி ஆணையர் மத்திய மண்டலம் ஆர்.செந்தில்குமார், உதவி நிர்வாக பொறி யாளர் ஆர் பிரபாகரன், இளநிலை பொறி யாளர் எஸ்.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம், கிழக்கு நகரச் செயலாளர் என்.செல்வராஜ், நகரக்குழு உறுப்பினர் த.நாகராஜ். கிளைச் செயலாளர் டெம்போ நாகராஜ் மற்றும் 64 ஆவது வட்ட திமுக செயலாளர் ஆர்.சீனிவாசன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.