கோவை, ஜூன் 8– கோவையில் கல்வி கடன் வழங்க சிறப்பு லோன் மேளா நடத்த வேண்டும் என மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தி னார். மாவட்ட வளர்ச்சி ஒருங்கி ணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புத னன்று அக்குழுவின் தலைவரும், கோவை நாடாளுமன்ற உறுப்பின ருமான பி.ஆர்.நடராஜன் தலை மையில் நடைபெற்றது. இதில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண் முகசுந்தரம், மாநகரட்சி மேயர் கல் பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், சட்ட மன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், வி.பி.கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், துணை மேயர் வெற்றிச்செல்வன், மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி அசோ கன், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் உட்பட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங் கேற்றனர்.
இக்கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் ஒன்றிய, மாநில அர சுகள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடைபெறும் மக்கள் நலன் சார்ந்த பணிகள் குறித்தும், அதில் உள்ள இடையூறுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. எக்காரணங் களை கொண்டும் மக்கள் நலதிட் டங்கள் தாமதப்படுத்தக்கூடாது விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பி.ஆர்.நடராஜன் எம்.பி., கேட்டுக்கொண்டார். மேலும், இந்த ஆண்டு கல்வி கடன், விவசாய கடன், சிறுகுறு தொழில் கடன் உள்ளிட்டவைக ளுக்காக 27 ஆயிரத்து 700 கோடி ரூபாய் என நிர்ணயித்திருப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்த னர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் அனைத்து தரப்பு மக்க ளும் பொருளாதாரத்தில் கடுமை யாக பாதித்துள்ளனர். ஆகவே இம் மாவட்டத்தின் வளர்ச்சியை கணக் கில் கொண்டு கூடுதலான கடன் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக பொருளாதார வசதியின்மையால் மாணவர்களின் கல்வி எந்த வகை யிலும் பாதிக்கப்படக்கூடாது. வங் கிகள் இந்த ஆண்டு கல்வி கடனை அதிகப்படுத்த வேண்டும். இதற் கான முன்னோடி வங்கிகளின் அதி காரிகள் பங்கேற்கிற கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்த வேண்டும். மாணவர்க ளுக்கு கல்வி கடன் வழங்கும் சிறப்பு லோன் மேளா ஏற்பாடு செய்ய வேண்டும். இதில் கல்வி கடனை விரைந்து தருவதற்க் கான உத்தரவாதத்தை அளிக்கும் வகையில் லோன் மேளா இருக்க வேண்டும்.
இதேபோன்று கோவை மாநக ரில் ஸ்மார் சிட்டி பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகி றது. குறிப்பாக பந்தயசாலையில் ஆரம்பிக்கப்பட்ட முதல் ஸ்மார்ட் சிட்டி பணிகள் இன்னும் முடிவுறா மல் இழுத்துக்கொண்டேயிருக் கிறது. புதிதாக கோவை மாநக ராட்சிக்கு பொறுப்பேற்றுள்ள ஆணையாளர் இதனை கருத்தில் கொண்டு ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியநாயக் கன்பாளையத்தில் ஆரம்பிக்கப் பட்ட மேம்பால பணிகள் பல வரு டங்களாக நடைபெற்று வருகிறது. இங்கு திட்ட சாலைகள் எதுவும் இல்லாததால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பெரும் அவ திக்குள்ளாகி வருகின்றனர். நெடுஞ் சாலைத்துறை, மின்துறை, குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய மூன்று துறைகளும் ஒருங்கினைப்பு இல் லாமல் இருப்பது தெரிய வருகி றது. இத்துறைகளின் அதிகாரி களை அழைத்து மாவட்ட ஆட்சி யர் தலைமையில் கூட்டத்தை நடத்தி மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.ஆர்.நட ராஜன் எம்.பி., கேட்டுக்கொண் டார். இதனைத்தொடர்ந்து பேசிய ஆட்சியர், ஆணையாளர் உள் ளிட்ட அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினரின் ஆலோசனைகளை உள்வாங்கிக் கொண்டதாகவும், அதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுப்பதாகவும் கூட்டத் தில் உறுதியளித்தனர்.