மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனின், 5 ஆண்டு கால மக்கள் பணிகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா மற்றும் பொதுக்கூட்டம், கோவை சித்தாபுதூரில் ஞாயிறன்று நடைபெற்றது. கட்சியின் மூத்த தலைவர் அ.சவுந்தரராசன், மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், பி.ஆர்.நடராஜன் எம்.பி., மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.