நாமக்கல், அக்.21- கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் விசைத்தறி தொழிலா ளர்கள், 20 சதவிகித தீபாவளி போனசை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு ஆகிய பகுதி களில் 50 ஆயிரத்திற்கும் மேற் பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளனர். இந்த விசைத்தறி தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக் கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பள்ளிபாளையம் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது விசைத்தறி தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் சதவிகித அடிப்படையில் வழங்கப்பட்டு வரு கிறது. பழையபோனஸ் ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. இந் தாண்டு புதிய ஒப்பந்தம் போட வேண்டும். கந்துவட்டி கொடுமை, தொழில் நெருக்கடி என பல்வேறு இடர்களை விசைத்தறி தொழிலா ளர்கள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிற நிலையில், விசைத்தறி தொழிலாளர்கள் பெரும் எதிர்பார்ப்போடு போன சுக்காக காத்திருக்கின்றனர். இது குறித்து நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் எம். அசோகன் கூறுகையில், பள்ளி பாளையம் வட்டாரத்தில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் உள்ளனர். அருகிலுள்ள குமாரபாளையம், திருச்செங் கோடு என உள்ளடக்கினால் மொத்தமாக 50 ஆயிரம் தொழிலா ளர்கள் இந்த விசைத்தறி தொழிலை மட்டுமே நம்பியே உள்ளனர். குடும்பம், குடும்பமாக விசைத்தறி யில் பணியாற்றி வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் உயர்ந் துள்ளது. ஆனால், விசைத்தறி தொழிலா ளர்களுக்கோ போதிய வருமானம் இன்றி தவிப்புக்குள்ளாகி வருகின் றனர். கடும் பொருளாதார பாதிப் பால் விசைத்தறி தொழிலாளர்கள், நுண் நிதி நிறுவனங்களில் கடன் பெறுவது, கந்துவட்டி கும்பலிடம் சிக்குவது போன்ற நிகழ்வுகள் தொடர்கதையாகி வருகிறது. வட்டிக்கு வட்டி, வட்டி போடும் குட்டி என சொல்லெண்ணா துய ரத்தில் விசைத்தறி தொழிலா ளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இத் தகைய மோசமான சூழலில் இருந்து விசைத்தறி தொழிலாளர் களை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் சிஐடியு நாமக்கல் விசைத்தறி தொழிலாளர் சங்கம் தொடர்ந்து இயங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு போடப்பட்ட மூன்று ஆண்டு கால ஒப்பந்தமான, ஒன் பதரை சதம் போனஸ் வழங்குவது என்ற ஒப்பந்தம் காலாவதி ஆகி யுள்ள நிலையில், தற்போது புதிய ஒப்பந்தமாக 20 சதவிகிதம் போனஸ் வழங்க வேண்டும் என்பதை வலியு றுத்தி தொழிலாளர் நலத்துறை மற்றும் விசைத்தறி உரிமையாளர் களுக்கு கோரிக்கை மனு அளித் துள்ளோம். எனவே, தமிழக அரசு உரிய கவனம் செலுத்தி விசைத்தறி தொழி லாளர்களின் நியாயமான 20 சத மான தீபாவளி போனஸ் பெற்று தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தீபாவளி பண்டிகையை விசைத்தறி தொழிலாளர்கள் கொண்டாடுவதற்கு ஏதுவாக 15 நாட்களுக்கு முன்பாகவே தீபாவளி போனசை வழங்கிட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியு றுத்தி, பள்ளிபாளையம் ஒன்றிய பகுதியில் பல்வேறு இடங்களில், தெருமுனைப் பிரச்சாரங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடை பெற உள்ளது. இப்போராட் டங்களில் தொழிலாளர்களை அணி திரட்டும் வகையில் வீடு, வீடாக சென்று விசைத்தறி தொழிலாளர் களை நேரில் சந்தித்து துண்டு பிர சுரங்கள் வழங்கி வருகிறோம் என்றார்.