திருப்பூர், டிச.4- தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளனத்தின் சார் பில் ஸ்தாபன விரிவாக்கம் வளர்ச்சிக்கான முன்னணி ஊழியர் கள் பங்கேற்கும் மாநில அளவிலான சிறப்பு பேரவை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. மாநிலத்தலைவர் பி.முத்துசாமி தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில், ஜவுளி தொழில் குழு அகில இந்திய கன்வீனர் ஆர்.கருமலையான், சிஐடியு மாநில பொதுச் செய லாளர் ஜி.சுகுமாறன், சம்மேளன பொதுச் செயலாளர் எம். சந்திரன், மாநிலப் பொருளாளர் எம்.அசோகன், திருப்பூர் சிஐ டியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.