நாமக்கல், நவ.18- மின் பகிர்மான அலுவலகத்தை மாற்ற வேண்டாம் என நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் புத னன்று கோரிக்கை மனு அளித்தனர். நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார் பில், ஒட்டமெத்தை பகுதியில் அமைந்துள்ள, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் கோபா லிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்ப தாவது, குமாரபாளையம் வட்டம், ஆலாம்பாளையம் பேரூ ராட்சி 9, 10, 11, 12 ஆகிய வார்டுகள் புதுப்பாளையம் ஊராட்சி யில் உள்ளது. 1, 2, 7 ஆகிய வார்டுகள் காவேரி ஆர்.எஸ். பகு தியில் உள்ளது. காவேரி ஆர்.எஸ்.பகுதியில் வீட்டு இணைப்பு சுமார் 1500 உள்ளது. விசைத்தறி உள்ளிட்ட சிறு, குறு கூடங்கள் 750 என மொத்தமாக 2500 மின் இணைப்புகள் பள்ளிபாளை யம் மின் நகர் பகிர்மான அலுவலகத்தின் கீழ் இயங்கி வரு கிறது. தற்போது எஸ்.பி.பி. காலனி மின் அலுவலகத்தில் 2500 மின் இணைப்புகளை இணைக்க உள்ளதாக தகவல் வெளியா கிறது. மேற்படி அப்படி இணைக்கப்படும் பட்சத்தில், மின் நுகர்வோர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவார்கள். தற்போதைய மின் பகிர்மான அலுவலகம் மிக அருகில் உள்ளதால், இதே இடத்தில் நீடிக்க வேண்டும். எஸ்பிபி கால னியில் அமைக்கப்பட்டால் 5 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இதனால் மின் நுகர்வோர் மிகுந்த மன உளைச்சலுக்கும், பாதிப்புக்கும் ஆளாவார்கள். எனவே மின் பொறியாளர் அவர்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வழங் கப்பட்ட மனுவில் குறிப்பிடபட்டுள்ளது. இந்த மனுவை நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலா ளர் சங்க செயலாளர் எம்.அசோகன் மற்றும் விசைத்தறி தொழி லாளர் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.