நாமக்கல், செப்.23- நாமக்கல் அருகில் விசைத்தறி உரிமை யாளரின் மிரட்டல் காரணமாக விசைத்தறி தொழிலாளி, மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்துள்ள வெடியரசம்பாளையம் கிரா மத்தில் வசிக்கும் நடராஜன் மகன் மணி என் பவர், தன் மனைவி ஜெயந்தியுடன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமாவிடம் புகார் மனு கொடுக்க வந்தார்கள். அப்போது மனு எழுதிக் கொண்டு வராததால், அவரை மனு எழுதிக் கொண்டு வரும்படி அலுவலர்கள் கூறியுள்ளனர். மனு எழுதுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த அந்த தம்பதியினர், திரும்பி வரு கின்ற போது விசைத்தறி தொழிலாளி மணி, தன்னுடைய உள் ஆடையில் பெட்ரோல் கேனை மறைத்து வைத்திருந்த நிலையில், திடீரென பெட்ரோலை தன் தலையில் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன் றார். அப்போது அந்த இடத்துக்கு வந்த காவல் துறை மற்றும் ஊர்க்காவல் படையினர் மணியை தடுத்து நிறுத்தி, அவரை போலீசார் விசாரித்த போது அவர் கூறியதாவது, வெடி யரசம் பாளையம் கிராமத்தில் உள்ள விசைத் தறி முதலாளி தங்கராஜ் என்பவர், 2022 ஆம் ஆண்டு விசைத்தறி ஓட்டுவதற்காக, தங்கு வதற்கு வீடு கொடுத்து ரூ.1 லட்சத்து 25 ஆயி ரம் முன்பணமாக கொடுத்திருந்தார். அதை திருப்பி கேட்டுக் கொண்டும், அந்த வீட்டை காலி செய்யச் சொல்லி வற்புறுத்தி வருகிறார். மேலும், கடந்த நான்கு மாதங் களாக எந்த விசைத்தறிப்பட்டறைக்கு சென் றாலும் எங்களை வேலைக்கு அனுமதிக்க கூடாது என்று கட்டுப்பாடு விதித்திருக்கிறார். இதனால், நாங்கள் எந்த விசைத்தறிக்கும் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கிறோம். எனவே, விசைத்தறி உரிமையாளர் தங்க ராசுவை அழைத்து விசாரித்து எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். வேறு வேலை வாய்ப்பு வழங்கவும் உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டுமென கூறினர். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தற்கொலைக்கு முயன்ற விசைத்தறி தொழிலாளி மணி மற்றும் அவருடைய மனைவியை முதலுதவி சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவ மனைக்கு போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூல மாக அனுப்பி வைத்தனர்.