districts

img

சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிப்பு

நாமக்கல், நவ.23- சட்டவிரோதமாக ஆற்றில் கழிவுகளை வெளியேற்றிய 7 சாயப்பட்டறைகளின் மின்  இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள ஆவத்திபாளையம் பகுதி யில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். காவிரி ஆற்றை இணைக்கும் மழைநீர் ஓடையும் உள்ள தால், அவ்வப்போது திடீரென சாய சாலை கள் உருவாகி வருவது வழக்கம். பொது மக்களின் புகார் காரணமாக, மாசு கட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகள் தொடர் நடவடிக் கையால், சாய சாலைகள் முறையாக கண்கா ணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அனுமதி பெறாத சாய சாலைகளிலிருந்து இரவு நேரங்களில் கழிவுநீர் வெளியேற் றப்படுவதாகவும், ஆற்றில் போதிய நீர்வ ரத்து இல்லாததால், குடிநீரில் சாயக்கழிவு கலப்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற் பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மணிவண்ணன், உதவி பொறியாளர்கள் குணசேகரன், சந் தானகிருஷ்ணன், உதயன் உள்ளிட்ட அதி காரிகள் ஆவத்திபாளையம் உள்ளிட்ட பகுதி களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொ ழுது ஆவத்திபாளையம், களியனூர் உள் ளிட்ட பகுதிகளில் முறைகேடாக இயங்கிய 7  சாயப்பட்டறைகளின் மின் இணைப்பை அதி காரிகள் துண்டித்து, இயந்திரங்களுக்கு சீல்  வைத்தனர். தொடர்ந்து காவிரி ஆற்றை மாசு படுத்தும் சாய ஆலைகள் மீது தொடர் நடவ டிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரி வித்தனர்.