districts

img

அரசியல் அறத்தின் அடையாளம் என்.சங்கரய்யாவிற்கு செவ்வணக்கம்

திருப்பூர் செந்தொண்டர் பேரணி ஒத்திவைப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தோழர் என்.சங்கரய்யா மறைவை தொடந்து, அனைத்து கட்சிகள் சார்பில் வெள்ளி யன்று காலை 10 மணிக்கு குமரன் சிலையில் இருந்து ஊர்வலம் புறப் பட்டு, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே இரங்கல் கூட்டம்  நடைபெற உள்ளது. இதனிடையே, நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நவ.19 ஆம் தேதியன்று திருப்பூரில் செந் தொண்டர் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடக்க இருந்தது. தோழர் என். சங்கரய்யா மறைவையொட்டி பேரணி ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, நவ.15- விடுதலை போராட்ட வீரர், தகை சால் தமிழர், அரசியல் அறத்தின் அடை யாளமாய் திகழ்ந்த தோழர் என்.சங் கரய்யாவின் மறைவிற்கு தமிழகம் கண் ணீர் மல்க செம்மாஞ்சலியை செலுத்தி வருகிறது.  இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்,  இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியை நிறுவிய 32 பேரில்  தோழர் சங்கரய்யாவும் ஒருவர். மார்க் சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பி னர், மாநிலச் செயலாளர், தீக்கதிர், ஜன சக்தி நாளிதழ்களின் ஆசிரியர், விவ சாயிகள் சங்க பொதுச்செயலாளர் உள் ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் கள மாடியவர். மாணவர் சங்கத்தை உரு வாக்கி, அதன் முதல் தலைவராக செயல் பட்ட தோழர் சங்கரய்யாவிற்கு, தமிழ் நாடு அரசு சார்பில் “தகைசால் தமிழர் விருது” பெற்று, நூற்றாண்டுகளை கடந் தவர். இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக புதனன்று காலை சங்கரய்யா உயிரிழந்தார். அரசியல் அறத்தின் அடையாளமான தோழர் என். சங்கரய்யாவின் மறைவிற்கு தமிழகமே கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்து வருகிறது.  இதன்ஒருபகுதியாக, கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு சார்பில் இரங்கல் ஊர் வலம் மற்றும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. காந்திபுரம் சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத்தில் தொடங் கிய இரங்கல் ஊர்வலம் 100 அடி சாலை  வழியாக சென்று சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையில் நிறைவுற்றது. இதை யடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த தோழர் சங்கரய்யாவின் உருவப்படத் துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப் பட்டது. இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட் டச் செயலாளர் சி.பத்மநாபன், மாநிலக் குழு உறுப்பினர் ஏ.ராதிகா, இந்திய கம் யூனிஸ்ட் கட்சியின் மாநில பொருளா ளர் எம்.ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் சிவசாமி, மதிமுக அவைத்தலைவர் சிவசேனாதிபதி, தபெதிக பொதுச்செய லாளர் கு.ராமகிருட்டிணன், தமிழ் புலி கள் கட்சி தலைவர் நாகை.திருவள்ளு வன், ஆதித்தமிழர் பேரவை பொதுச் செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட சர்வ  கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக் கள் திரளானோர் பங்கேற்று, என்.சங் கரய்யாவிற்கு புகழஞ்சலி செலுத்தி னர்.

சேலம்

சேலம் சிறை தியாகிகள் நினைவ கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் இரங் கல் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ் விற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா தலைமை வகித் தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள்  ஆர்.குழந்தைவேல், எம்.சேது மாதவன், மேற்கு மாநகரச் செயலாளர் எம்.கனக ராஜ், பாலர் சங்க மாநில நிர்வாகி கே.ஜோ திலட்சுமி, வங்கி ஊழியர் சங்க மாநில நிர்வாகி எஸ்.ஏ.ராஜேந்திரன் ஆகியோர் இரங்கல் உரையாற்றினர். இதில் பலர்  கலந்து கொண்டு, சங்கரய்யாவின் உரு வப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத் தினர். இதேபோன்று சேலத்தில் பல் வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சி மற் றும் சிஐடியு உள்ளிட்ட வெகுஜன அரங் கங்கள் சார்பில் சங்கரய்யாவின் மறை விற்கு இரங்கல் தெரிவித்து கூட்டம் நடைபெற்றது. 

ஈரோடு
ர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  ஈரோடு மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. பரமசிவம் தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், மூத்த தோழர் கே.துரைராஜ், செயற் குழு உறுப்பினர்கள் ஆர்.கோமதி, சி. முருகேசன், தாலுகா செயலாளர் எம். பாலசுப்பிரமணி, மாவட்டக்குழு உறுப் பினர்கள் பா.லலிதா, எம்.நாச்சிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, சங்க ரய்யாவின் உருவப்படத்திற்கு மரி யாதை செலுத்தினர். இதேபோன்று மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங் களில் தோழர் என்.சங்கரய்யா மறை விற்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

தருமபுரி
 

தருமபுரி மாவட்டம், செங்கொடி புரத்திலுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் வைக் கப்பட்டிருந்த தோழர் என்.சங்கரய்யா வின் உருவப்படத்திற்கு பலர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் கட்சியின்  மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். மாரிமுத்து, சி.நாகராசன், எம்.முத்து, எஸ்.கிரைஸாமேரி, வே.விசுவநாதன், ஆர்.சின்னசாமி, ஆர்.மல்லிகா, ஒன்றி யச் செயலாளர் என்.கந்தசாமி, மாவட் டக்குழு உறுப்பினர்கள் கே.என்.மல் லையன், கே.பூபதி, ஏ.ஜெயா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கம் சார்பில், தருமபுரி முத்து நினைவு அறக்கட்டளை அலுவலகம் முன்பு இரங்கல் கூட்டம்  நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஜி.கணபதி, மாவட் டச் செயலாளர் எம்.முத்து, மாவட்டத்  தலைவர் கே.கோவிந்தசாமி, மாநிலக் குழு உறுப்பினர் பாண்டியம்மாள், மாவட்ட நிர்வாகிகள் ராஜா, சிவா, வெங் கடாஜலம் உட்பட பலர் சங்கரய்யாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, செவ்வஞ்சலி செலுத்தினர்.

திருப்பூர்
இதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக் குழு அலுவலகமான தியாகி பழனிச் சாமி நினைவகம் முன்பு வைக்கப்பட்டி ருந்த தோழர் என்.சங்கரய்யா உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதனன்று நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.மூர்த்தி தலைமை வகித்தார். இதில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகு மாறன், தோழர் சங்கரய்யாவின் போரட்ட வரலாறு குறித்து பேசினார். மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட் டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பல்லடத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின்  சார்பில் நடைபெற்ற புகழஞ்சலி கூட்டத் தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூர்த்தி,  காங்கிரஸ் கட்சி நகரத் தலைவர் ஈஸ்வர மூர்த்தி, திமுக நடராஜ் அதிமுக சு.தர்ம ராஜ், தமிழ் புலிகள் கட்சி கார்த்தி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆறுக் குட்டி, மதச்சார்பற்ற ஜனதா தளம் சார் பில் பாலசுப்ரமணியம், மதிமுக ரகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல் லடம் ஒன்றியச் செயலாளர் ஆர்.பரம சிவம் உட்பட திரளானோர் பங்கேற்ற னர். அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன் றியக்குழு சார்பில் அங்கேரிபாளையம்  பகுதியில் தோழர் சங்கரய்யாவிற்கு செவ் வஞ்சலி செலுத்தப்பட்டது. 

நாமக்கல்
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளை யம் பேருந்து நிறுத்தம் அருகே அனைத் துக் கட்சி சார்பில் விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யாவின் இரங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தி லிருந்து ஒன்றிய அலுவலகம் வரை மௌன ஊர்வலம் நடைபெற்றது. இதன்பின் நடைபெற்ற இரங்கல் கூட் டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.வெங் கடாசலம் தலைமை வகித்தார். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சு.சுரேஷ், ஒன்றியச் செயலாளர் தேவராஜ் திமுக ஒன்றியச் செயலாளர் எம்.தங்கவேல், மாவட்ட நிர்வாகி ஆர். துரைசாமி, முன்னாள் கவுன்சிலர் ராஜேந் திரன், ஒன்றியப் பொருளாளர் லட்சும ணன், அதிமுக அம்மா பேரவை மாவட் டச் செயலாளர் சந்திரசேகரன், ஒன்றி யச் செயலாளர் சக்திவேல், துணைச் செயலாளர் சக்திவேல், சமூக வலைதள பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், காங்கி ரஸ் மாவட்டச் செயலாளர் தங்கராஜ், ரங்கநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  நிர்வாகிகள் ஜெயராமன், செங்கோட்டு வேல் உட்பட பலர் கலந்து கொண்டு, சங் கரய்யாவிற்கு புகழஞ்சலி செலுத்தி னர்.