நாமக்கல், நவ. 4 - விசைத்தறி தொழிலாளி களின் தீபாவளி போனஸ் பேச்சுவார்த்தை நவ.8 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட் டுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில் ஏராளமான விசைத்தறி கூடங் கள் இயங்கி வருகின்றன. இந்த தொழிலை நம்பி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தீபாவளி போனஸ் ஒப்பந்தம் காலாவதியாகி உள்ள நிலையில், தற்போது புதிய தீபாவளி போனஸ் ஒப்பந்தம் போட வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் போனஸ் பேச்சு வார்த்தைக்கு பள்ளிபாளையம் விசைத்தறி உரிமையாளர் சங்க நிர்வாகிகள், விசைத் தறி தொழிலாளர் சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்தனர். இதனைத்தொடர்ந்து, பள்ளிபாளையம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் தீபா வளி போனஸ் பேச்சுவார்த்தையானது நடை பெற்றது. இதில், முதல் கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உறுதியான முடிவுகள் எட்டப்படாததால் வரும் நவ.8 ஆம் தேதிக்கு மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.