ஈரோடு, நவ. 5- ஈரோடு மாவட்ட ஆட்சியரகத்தி லுள்ள கணினிகள் மற்றும் பர்னிச்சர் களை ஜப்தி செய்ய நோட்டீஸ் வழங்கப் பட்டுள்ளது. ஈரோடு, கொல்லம்பாளையம் பகுதியில் வீட்டு வசதி வாரியம் சார்பில் குடியிருப்புகள் கட்டுவதற்காக அந்தப் பகுதியைச் சேர்ந்த கே.பி.நடராஜன், குப்பு விஜயன், தட்சிணாமூர்த்தி, அனிதா, தினேஷ்குமார், மணிமேகலை, லட்சுமி நாராயணன், சிந்து ஆகிய எட்டு பேருக்குச் சொந்தமான 5.45 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்காக, அவர்களுக்கு 1984ஆம் ஆண்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு, 1986ஆம் ஆண்டு அவர்களது நிலம் கையகப் படுத்தப்பட்டது. இதற்காக, அரசுத் தரப்பிலிருந்து வழங்கிய தொகை குறை வாக இருப்பதால், கூடுதல் தொகை வழங்கக் கோரி, ஈரோடு சார்பு நீதி மன்றத்தில் எட்டுப் பேரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசா ரித்த நீதிபதி, ஏக்கர் ஒன்றுக்கு கூடுத லாக ரூ.3,05,900 வீதம் வழங்க உத்தர விட்டார். இந்தத் தொகையும் சந்தை மதிப்பைவிட மிகவும் குறைவாக இருந் ததால், மீண்டும் கூடுதல் தொகை வழங்கக் கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் எட்டுப் பேரும் மேல் முறை யீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விலையை உயர்த்தி அசலும், வட்டியும் சேர்த்து மொத்தம் 78,73, 635 ரூபாயை இந்த எட்டு நில உரிமையாளர்களுக்கும் வழங்குமாறு தீர்ப்பளித்தது.
இந்தத் தொகையை வழங்க மறுப்பு தெரிவித்து, அரசு தரப்பில் உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்றம் கூறிய தீர்ப்பு செல்லும் எனக் கூறி அரசுத் தரப்பில் தொடரப்பட்ட அந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது. அதன் பிறகும் பாதிக்கப்பட்டவர் களுக்கு உரிய தொகை வழங்க தாமதம் செய்ததால், கட்டளை நிறைவேற்று மனு ஈரோடு முதலாம் கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது. இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள 50 கம்ப்யூட்டர்கள், 50 டைப் ரைட்டிங் மெஷின்கள், 50 இரும்பு பீரோக்கள், 100 சீலிங் ஃபேன்கள், 200 மர மேஜைகள், 200 இரும்பு மேஜைகள், 500 சேர்கள், 4 லிஃப்ட்டுகள் ஆகியவற்றை ஜப்தி செய்ய ஈரோடு முதலாம் கூடுதல் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நீதிமன்ற அமினா ரவிகுமார் உள்ளிட்ட நீதிமன்ற ஊழியர் கள் ஜப்தி செய்வதற்கான நோட்டீஸை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளரிடம் வழங்கினர். இதனையடுத்து நீதிமன்ற ஊழியர்களும், வழக்கறி ஞரும், ஆட்சியரின் நேர்முக உதவி யாளரிடம் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். இதில் சற்று கால அவகாசம் அளிக்குமாறு கேட்டதால் ஜப்தி நடவடிக்கையை நிறுத்தி வைக்கப் பட்டது.