நாமக்கல், மார்ச் 5- நடைமுறை சாத்தியமற்ற இலக்குகளை நிர்ணயம் செய்து ஊழியர்களுக்கு நெருக் கடி கொடுப்பதை கைவிடக்கோரி அஞ்சல் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அஞ்சல் துறை நடைமுறை சாத்திய மற்ற இலக்குகள் நிர்ணயித்து, ஊழியர் களுக்கு நெருக்கடி கொடுப்பதை கைவிட வேண்டும். கமலேஷ் சந்திரா குழுவின் எஞ்சியுள்ள சாதகமான பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். ஜிடிஎஸ் ஊழி யர்களுக்கான உறுப்பினர் சரிபார்ப்பினை உடனே நடத்த வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி திருச்செங்கோடு தபால் அலுவல கம் முன்பு அகில இந்திய அஞ்சல் ஊழி யர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராமசாமி, கோட்ட செயலாளர்கள் பாலகணேஷ், துரைசாமி, கோட்ட தலைவர் வெள்ளையன், கிளைச் செயலாளர்கள் எம்.ஜெகதீஸ்வரன், விஜய குமார், ஜிடிஎஸ் கிளைச் செயலாளர் ராமச் சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.
ஈரோடு
ஈரோடு தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சக்தி வேல், ரவிக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், சங்கத்தின் மாநில நிர் வாகி சதாசிவம், அஞ்சல் ஓய்வூதியர் சங்க நிர்வாகி சாமிநாதன் உள்ளிட்ட திரளான அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.