districts

img

சாலையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு

பொள்ளாச்சி அடுத்த புளியம்பட்டி ஊராட்சியின் சாலை ஓரத்தில் தினமும் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது புளியம்பட்டி கிராமம். இங்கு சுமார் 2,000க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். புளியம்பட்டி நெடுஞ்சாலை ஓரத்தில் உபயோகப்படுத்தப்பட்ட ஊசிகள், சிரஞ்சுகள், மருந்து, மாத்திரைகள் , முககவசங்கள் மற்றும் பல்வேறு குப்பைகள் அடையாளம் தெரியாத நபர்களால் இரவு நேரங்களில்  சாலையோரங்களில் கொட்டப்படுகிறது.
இதை கட்டுப்படுத்த, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், சாலையோர பகுதிகள் குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் நோய்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்